search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pondicherry suicide"

    • தேர்வில் தோல்வி பயத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு இந்திராநகரில் வசிப்பவர் கிருஷ்ண பிரசாத் சர்மா. இவர் ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பிரதீப் சர்மா (வயது17). இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதியிருந்தார்.

    இதற்கிடையே பிரதீப் சர்மாவுக்கு தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம் இருந்து வந்தது. இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு பெற்றோர் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெறுவாய் என ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் பிரதீப் சர்மா விரத்தியுடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு பிரதீப் சர்மா படுக்கை அறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து சந்தேகமடைந்த பிரதீப் சர்மாவின் தாய் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது அங்கு மின் விசிறியில் பிரதீப் சர்மா துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து கிருஷ்ண பிரசாத் சர்மா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை குரும்பாப்பேட் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி பரமேஸ்வரி (52). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் உள்ள அமைதி நகரில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரமேஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரமேஸ்வரி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அப்போது திடீரென மனமுடைந்த பரமேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தட்டாஞ்சாவடி அருகே மகன்கள் வேலைக்கு செல்லாததால் விரக்தி அடைந்த தந்தை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    தட்டாஞ்சாவடி கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்கிற சங்கர் (வயது 52). மரச்சாமான்கள் செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி ஜெயசக்தி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    அவர்கள் சரியாக படிக்கவில்லை. வேலைக்கும் செல்லவில்லை. தாய் இல்லா பிள்ளைகளான உங்களை கஷ்டப்பட்டு வளர்த்துள்ளேன். நீங்கள் ஏதாவது வேலைக்கு செல்லுங்கள் என்று கூறி கண்ணன் வற்புறுத்தி வந்தார்.

    ஆனாலும், அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் வீட்டில் நைலான் கயிறால் தூக்கு மாட்டி தொங்கினார். அதன் சத்தம் கேட்டு அவரது அண்ணன் ஓடி வந்தார். மற்றவர்களும் அங்கு வந்தனர்.

    அவர்கள் கண்ணனை தூக்கில் இருந்து இறக்கி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

    இது தொடர்பாக கோரி மேடு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    முத்திரையர் பாளையத்தில் மனைவி கோபித்து சென்றதால் கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர்பாளையம் கோவிந்தன்பேட் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 36). கூலித் தொழிலாளி.

    இவருக்கு நிரோஷா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள விஜயன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.

    அதுபோல் நேற்று இரவு விஜயன் மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் கணவனிடம் கோபித்து கொண்டு நிரோஷா குழந்தைகளை அழைத்து கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்று தங்கினார்.

    மனைவி கோபித்து சென்றதால் மனவேதனை அடைந்த விஜயன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து கணவர் தூங்கி இருப்பார் என கருதி நிரோஷா வீட்டுக்கு வந்தார். அப்போது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×