search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "daughter love marriage"

    மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது42). முன்னாள் ராணுவ வீரர். தற்போது கேரளாவில் ஜீப் ஓட்டி வருகிறார். இவருக்கு வேல்மணி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும், ஹரீஸ் என்ற மகனும் உள்ளனர்.

    தமிழ்ச்செல்வனின் தங்கையின் மகன் சுதர்சனை கீர்த்தனா காதலித்து வந்துள்ளார். இதற்கு தமிழ்ச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். தந்தையின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் கீர்த்தனா அவரையே திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் மன வேதனையடைந்த தமிழ்ச் செல்வன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகள் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள சக்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அகத்தூர்சாமி (63), விவசாயி. இவரது மனைவி சொர்ணலதா(50).இவர்களுக்கு சினேகா(23) என்ற மகள் உள்ளார். என்ஜினீயரிங் படித்து முடித்த சினேகா பெற்றோர் எதிர்ப்பை மீறி ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    ஒரே மகளும் தங்களது பேச்சை கேட்கவில்லையே என அகத்தூர் சாமியும், சொர்ணலதாவும் மனம் உடைந்து காணப்பட்டனர்.

    நேற்று மாலை வீட்டில் இருவரும் வி‌ஷம் குடித்தனர். பின்னர் அங்கலக்குறிச்சியில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து தாங்கள் வி‌ஷம் குடித்த தகவலை தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பொள்ளாச்சிக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டில் இருவரும் மயங்கி கிடந்தனர்.

    இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அகத்தூர் சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொர்ணலதா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலுகா மேற்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

    கோவை ரத்தினபுரி அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள பழனிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). கூலித் தொழிலாளி. இவரது மகள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள் காதல் திருமணம் செய்ததால் ஆறுமுகம் கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×