search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide employee"

    குடும்ப தகராறில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 50). பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி இந்திராணி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தங்கவேலு மது பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இவர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை இந்திராணி கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த தங்கவேலு மனைவியிடம் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார். பின்னர் அந்த பகுதியில் உள்ள வேப்பமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தங்கவேலின் உடலை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லடம் அம்மாபாளையம் அருகே உள்ள சி.எம். நகரை சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ரஞ்சிதா கணவர் வெளியே சென்ற நேரத்தில் சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ரஞ்சிதாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ரஞ்சிதா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை ரத்தினபுரி அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள பழனிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). கூலித் தொழிலாளி. இவரது மகள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள் காதல் திருமணம் செய்ததால் ஆறுமுகம் கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×