என் மலர்
நீங்கள் தேடியது "married"
- திருமணம் செய்து வாலிபரை ஏமாற்றிய பெண் முதல் நாளிலேயே மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஈரோடு மாவட்டம் ஆய்வுக்கூடல் சக்தி நகரை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன் (35). இவர் சிவகாசியில் மீனம்பட்டியை சேர்ந்த திருமண புரோக்கர் ராணி என்பவர் மூலம் வரன் பார்த்தார்.
இவர் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் ஜெயலட்சுமி (28) என்பவரை திருமணத்திற்காக நவநீத கிருஷ்ணன் பெண் பார்த்தார்.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிவகாசி மீனம்பட்டியில் உள்ள கோவிலில் நவநீத கிருஷ்ணன்-ஜெயல ட்சுமிக்கு திருமணம் நடந்தது. அதன்பின் இருவரும் ஈரோட்டிற்கு சென்றனர்.
திருமணமான மறுநாள் ஜெயலட்சுமி தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து நவநீத கிருஷ்ணன் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது ஜெயலட்சுமி அங்கிருந்து திடீரென மாயமானார்.
சிவகாசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதாக நவநீத கிருஷ்ணன் சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பா.ஜ.க. விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர் இல்ல திருமணம் நாளை நடக்கிறது.
- காரைக்குடி-செக்காலை ரோடு சுபலட்சுமி மகாலில் திருமணம் நடக்கிறது.
காரைக்குடி
பா.ஜ.க. மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவரின் மகள் வழிப்பேரனும் சி.விஜய செந்தில்-வி.எஸ்.மேகலா தம்பதியரின் மகனுமான வி.எஸ்.ராஜா சேதுபதிக்கும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் முருகபூபதி தேவர்-ராமுத்தாய் தம்பதியரின் மகள் எம்.ஆர்.ஐஸ்வர்யாவிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
இந்த திருமணம் நாளை (புதன்கிழமை) காரைக்குடி-செக்காலை ரோடு சுபலட்சுமி மகாலில் நடக்கிறது. பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்குகிறார். மாநில தலைவர் அண்ணாமலை திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இதில் சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன், மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், பொது செயலாளர் கருப்பு முருகானந்தம்,மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, திரைப்பட இயக்குனர் பேரரசு உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருமணத்திற்கான ஏற்பாடுகளை எஸ்.ஆர்.தேவர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது.
- ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (25), கூலி தொழிலாளி. இவருக்கும், 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து பாலு, அவரது தந்தை பாக்கியநாதன், தாய் மஞ்சுளா, உறவினர்கள் சங்கர், கோதை ஆகியோர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹாலெ ஜென்சன். இவர் நியூசிலாந்து அணிக்காக 8 ஒரு நாள் போட்டி மற்றும் இருபது 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 26 வயதான ஜென்சன், ஒரு ஓரின சேர்க்கை விரும்பி ஆவார். அவரும் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் 23 வயது வீராங்கனை நிகோலா ஹன்கோக்கும் நெருங்கி பழகி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதுடன், அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். பெண்கள் கிரிக்கெட் உலகில் கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாறு ஜோடி சேர்ந்த 3-வது ஓரின சேர்க்கை இணை இதுவாகும். #Womencricketers
இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பாகிஸ்தான் பெண் இந்தியாவுக்கு வந்து ஒரு இந்தியரை திருமணம் செய்துள்ளார். #PakistaniGirl #IndianBoy
அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தை சேர்ந்தவர் பர்வீந்தர் சிங் (வயது 33). இவரது உறவுப்பெண் கிரண் சர்ஜீத் கவுர் (27), பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் பகுதியை சேர்ந்தவர். 2016-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். திருமணத்துக்காக பிப்ரவரி 23-ந் தேதியே கிரண், பாட்டியாலா வருவதாக இருந்தது. ஆனால் பயங்கரவாத தாக்குதலால் தாமதம் ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை 45 நாள் விசாவில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் மூலம் பாட்டியாலா வந்தார்.
அவர்களது திருமணம் அங்குள்ள குருத்வாராவில் சீக்கிய முறைப்படி நேற்று நடைபெற்றது. பர்வீந்தர் சிங் கூறும்போது, “கடந்த ஆண்டு நான் பாகிஸ்தான் செல்ல விசா கேட்டபோது மறுக்கப்பட்டது. அதனால் தான் பெண் வீட்டார் இங்கு வந்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எனது மனைவிக்கு இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பேன்” என்றார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சீலியாம்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு. இவருக்கு செல்வராஜ் (28) என்ற மகனும், வனிதா, ராஜேஸ்வரி ஆகிய மகள்களும் உள்ளனர்.
செல்வராஜ் ரிக் வண்டி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது.
செல்வராஜியின் தங்கை வனிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு தங்கை ராஜேஸ்வரிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் செல்வராஜ் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி மல்லியகரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது செல்வராஜ் உடல் அருகே ஈர துணி ஒன்று கயிறாக திரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
இந்த ஈரதுணியால் அவரது கழுத்தை இறுக்கி யாராவது கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார், அந்த ஈரதுணியை கைப்பற்றி, கைரேகை குறித்து கண்டுபிடிக்க தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்
இதையடுத்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஊரில் உள்ள கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை பார்ப்பதற்காக தீபா வந்திருந்தார்.
அப்போது செல்வராஜூம் அந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது தீபாவை பார்த்தவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. தீபாவின் அழகில் மயங்கிய அவர், திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். தான் உன்னை காதலிப்பதாகவும், என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா? என செல்வராஜ் கேட்டார். அதற்கு தீபா சம்மதித்தார்.
தேர் திருவிழாவின் போது சந்தித்த இருவரும் தொடர்ந்து இரண்டு நாட்கள் காதலித்தனர். பின்னர் 2 நாட்கள் கழித்து இருவரும் பெற்றோர் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தீபா பிரசவத்திற்காக கீரிப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.
இதையடுத்து செல்வராஜ் நேற்று காலை கீரிப்பட்டிக்கு சென்று தனது தங்கை ராஜேஸ்வரிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. ஆகவே திருமணத்தை முன்னின்று நாம் நடத்த வேண்டும். எனவே குழந்தையுடன் வருமாறு கூறி தீபாவை அழைத்து வந்தார்.
வீட்டிற்கு வந்ததும் செல்வராஜின் பெற்றோர் மகனின் 5 மாத குழந்தையை பார்க்க வேண்டி ஆசையுடன் எடுத்தனர். அப்போது கணவரிடம் தீபா நான் உங்கள் அப்பா, அம்மாவுடன் வீட்டில் வசிக்க மாட்டேன். தனியாக குடும்பம் நடத்துவோம் என்று கூறினார். குழந்தையையும் அவர்கள் எடுக்கக் கூடாது என தெரிவித்தார்.
மனைவி தகராறு செய்ததை தொடர்ந்து செல்வராஜ், தனி குடித்தனம் நடத்துவதற்காக அதே ஊரில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து நேற்று பால் காய்ச்சி அந்த வீட்டில் குடியேறினார்.
இந்த நிலையில் இரவு அவர்களுக்கு வீட்டில் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவில் தீபா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இன்று காலையில் கதவு திறந்து கிடந்ததை பார்த்ததும் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு செல்வராஜ் பிணமாக கிடந்தார் என்பது தெரியவந்தது.
இன்று காலை சகோதரிக்கு நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. அண்ணன் இறந்ததால் நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி சோகமாக மாறியது.
போலீசார், தலைமறைவான தீபாவை தேடி வருகிறார்கள். #tamilnews
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் பிரித்வி செல்லமுத்து. இவர் பிளஸ்-2 வரை ஈரோடு பள்ளியூத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்தார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் ஒரு பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி படிக்க சென்றார்.
அங்கு படிப்பு முடிந்ததும் அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த பல்கலைக்கழகத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்செலா கிளைபர் என்ற பெண் டாக்டருக்கு படித்து வந்தார். இவருக்கும் பிரித்வி செல்லமுத்துவுக்கும் காதல் ஏற்பட்டது. ஏஞ்செலா கிளைபர் டாக்டருக்கு படித்து முடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தனர். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
அதன் படி பிரித்வி செல்லமுத்து - ஏஞ்செலா கிளைபர் திருமணம் வெள்ளக்கோவில் முத்தூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ் முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. மணமகள் பட்டு சேலை அணிந்து இருந்தார். அவரது கழுத்தில் பிரித்வி செல்லமுத்து தாலி கட்டினார்.
இந்த திருமணத்தில் மணமகனின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
பின்னர் அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்ததும் மணமக்கள் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். #Marriage
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் பகுதியை சேர்ந்தவர் நவாஸ்(21). தனது உறவுக்காரப் பெண்ணான ரேஷ்மா(19) என்பவரை நவாஸ் உயிருக்குயிராக காதலித்து வந்தார். இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இந்த காதல் உறவுக்கு இருவரின் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே, நவாசின் சகோதரருக்கு ரேஷ்மாவின் அக்காவை திருமணம் செய்து கொடுத்துள்ளதால் அதே குடும்பத்தில் மீண்டும் ஒரு சம்பந்தம் செய்துகொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
இதற்கிடையில், பெற்றோர் தனக்கு மாப்பிள்ளை தேடுவதை அறிந்த ரேஷ்மா சமீபத்தில் தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் விகாராபாத் நகரில் உள்ள கிராஃபோர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், ரேஷ்மாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அவினாஷ், அவரது விபரீத முடிவுக்கான காரணம் தொடர்பாக அக்கறையுடன் விசாரித்தார். ரியாஸ் காதல் விவகாரம் பற்றி தெரியவந்த டாக்டர் இரு குடும்பத்தாரையும் அழைத்து சமரசம் பேசினார்.
உங்களது பிடிவாதத்தால் இரு உயிர்கள் பலியாக வேண்டுமா? அவர்கள் மீண்டும் தற்கொலைக்கு முயன்றால் என்னவாகும்? என்று சிந்தித்துப் பாருங்கள் என்று அவர் கூறிய அறிவுரை கைமேல் பலனைத் தந்தது. அதுவும் உடனடியாக.
இதையடுத்து, அந்த மருத்துவமனையில் மூக்கில் சுவாசக் குழாயுடன் இருந்த ரேஷ்மாவுக்கு மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது. நடக்க முடியாமல் சிகிச்சை பெற்றுவந்த நவாஸ் மணமகன் கோலத்தில் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
இருவீட்டார் முன்னிலையில் மதகுருவின் தலைமையில் மணமகளுக்கு ‘மஹர்’ பணம் மற்றும் தங்க நகைகளை தந்து நவாஸ் குடும்பத்தார் ரேஷ்மாவை மருமகளாக ஏற்றுக்கொண்டனர்.
புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ் (வயது 26). இவர் ‘தி லாஸ்ட் சாங்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (28) 10 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தார். இருவருக்கு இடையேயும் காதல் மலர்ந்தது.
இருவரும் பல இடங்களில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்டார்கள். 2012-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
பிரிந்த ஜோடி, 2015-ம் ஆண்டு திரும்பவும் சேர்ந்தது.
இருவரும் மறுபடியும் காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர்.
கலிபோர்னியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் இந்த ஜோடியின் வீடு எரிந்து நாசமானது. ஆனால் அது அவர்களுடைய காதலுக்கு ஒரு தடையாக இல்லை.
இந்த நிலையில் டென்னிசி மாகாணத்தில் உள்ள தனது பங்களாவில் வைத்து மைலி சைரஸ், தன் காதலர் லியாமை மணந்து கொண்டார். இதை அவர் உறுதி செய்துள்ளார். இந்த திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
டுவிட்டரில் மைலி சைரஸ் திருமணம் தொடர்பான படத்தை வெளியிட்டுள்ளார்.#MileyCyrus #LiamHemsworth
புதுச்சேரி:
வில்லியனூர் பெரியபேட் பால்வாடி தெருவை சேர்ந்தவர் முனுசாமி. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் விஷ்ணுபிரியா (வயது24). இவர் பி.காம். படித்து முடித்து தற்போது சி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் சம் பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய விஷ்ணுபிரியா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் விஷ்ணுபிரியா இல்லை.
இதையடுத்து முனுசாமி தனது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விஷ்ணுபிரியா தனது உறவினர் மகனான புவியரசன் (27) என்பவரை காதலித்து வந்ததும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டம் குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23). நர்சிங் படித்துள்ளார்.
இவர் தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ஸ்ரீஜா, அதன் பின்பு வீடு திரும்பவில்லை.
இதனால் உறவினர்கள் ஸ்ரீஜாவை தேடிவந்தனர். தோழிகளிடமும் கேட்டனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் குழித்துறை ஆற்றில் ஒரு இளம்பெண் பிணம் கடந்த 21-ந் தேதி காலையில் மிதந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிணமாக மிதந்த பெண் யார்? என்று விசாரித்தனர். இதில் அவர் தேங்காய்பட்டினம் உறவினர் வீட்டில் இருந்து மாயமான ஸ்ரீஜா என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஸ்ரீஜாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஸ்ரீஜாவின் உடலை அடையாளம் காட்டியதோடு, அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறினர்.
பின்னர் ஸ்ரீஜாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு குழித்துறை அருகே மஞ்சரவிளை பகுதியில் மருதங்கோடு - களியக்காவிளை சாலையில் மறியல் போராட்டமும் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அதன்பின்பு போலீசாரின் விசாரணை தீவிரமானது. மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைத்தது. அதில் ஸ்ரீஜா 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
திருமணத்திற்கு முன்பே ஸ்ரீஜா, கர்ப்பமாக இருந்ததால் அவரது சாவில் மர்மம் இருப்பதை புரிந்து கொண்ட போலீசார், ஸ்ரீஜாவின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என விசாரித்தனர். இதில் நித்திரவிளையை அடுத்த எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் பிபின் (26) என்பவரை ஸ்ரீஜா காதலித்து வந்தது தெரியவந்தது.
போலீசார் பிபினை தேடி சென்றனர். அங்கு அவர் தலைமறைவாகி இருந்தார். இதனால் ஸ்ரீஜா சாவில் பிபினுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த போலீசார் அவரை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் பிபினை கண்டு பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தான் ஸ்ரீஜாவை ஆற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் பிபினை கைது செய்தனர்.
பின்னர் அவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் கூறியதாவது:-
நித்திரவிளை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த ஸ்ரீஜாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தோம். அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக நான் ஆசை வார்த்தை கூறினேன்.
இதனால் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். இதில் ஸ்ரீஜா கர்ப்பம் ஆனார். இது பற்றி ஸ்ரீஜா என்னிடம் கூறினார்.ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்த போது அவர் 5 மாத கர்ப்பம் ஆக இருப்பது தெரியவந்தது.
கர்ப்பிணி ஆனதும் ஸ்ரீஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் கடந்த 19- ந் தேதி இரவு நான் ஸ்ரீஜாவை சந்தித்து என்னுடன் வருமாறு கூறினேன். நாங்கள் இருவரும் குழித்துறையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று கர்ப்பத்தை கலைத்துவிட முடிவு செய்தோம். கர்ப்பமாகி 5 மாதம் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என்று ஆஸ்பத்திரியில் கூறிவிட்டனர்.
இதை கேட்டதும் ஸ்ரீஜா என்னிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரச்சினை செய்தார். இதில் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே நான் அவரை குழித்துறை ஆற்று பாலம் அருகே அழைத்து வந்தேன். அங்கு ஸ்ரீஜாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென அவரை ஆற்றில் தள்ளிவிட்டேன். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.அவர் இறந்தது தெரிந்ததும் நான் தலைமறைவாகி விட்டேன். ஆனால் போலீசார் என்னை தேடி கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் போலீசில் கூறியுள்ளார். இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews