search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    30 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 60 வயது முதியவர்- சமூகவலைதளங்களில் புகைப்படம் வைரல்
    X

    30 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 60 வயது முதியவர்- சமூகவலைதளங்களில் புகைப்படம் வைரல்

    • 60 வயதான ஏரண்ணா அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.
    • ஏரண்ணா அனுஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பெண் கேட்டார்.

    பெங்களூரு:

    சமீபகாலமாக வயதான தொழிலதிபர்கள், பிரபலங்கள் சிலர் இளம் வயதுடைய பெண்களை திருமணம் செய்யும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது.

    அந்த வகையில் கர்நாடகத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் 30 வயது பெண்ணை திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகாவில் உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏரண்ணா. 60 வயதான இவர் அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.

    இந்நிலையில் ஏரண்ணாவின் மகனும், மகளும் அவரை கவனிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2-வது திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

    அதன்படி ஏரண்ணா, தனக்கான வரனை தேடினார். அப்போது மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த அனுஸ்ரீ (30) என்ற பெண்ணை அவருக்கு பிடித்து போனது. அனுஸ்ரீ தனது கணவரை பிரிந்த நிலையில் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

    இதையறிந்த ஏரண்ணா அனுஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பெண் கேட்டார். அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து அப்பே கவுடனஹள்ளி பகுதியில் உள்ள கோவிலில் வைத்து ஏரண்ணா-அனுஸ்ரீ திருமணம் எளிமையாக நடந்தது. இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர், வயதை காரணம் காட்டி இந்த திருமணத்தை தவிர்த்திருக்கலாம் எனவும், சிலர் ஏரண்ணா தனது வயதிற்கேற்ப வேறு பெண்ணை மணம் முடித்திருக்கலாம் எனவும் கூறி உள்ளனர்.

    இதுபோன்ற பல கருத்துக்களால் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×