search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 16 வயது சிறுமியை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்த வாலிபர்
    X

    கோவையில் 16 வயது சிறுமியை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்த வாலிபர்

    • வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த புகைப்படத்தை வைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மாதேகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கிப்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. எனக்கு 16 வயது இருக்கும் போது எனது காதலன் என்னை செங்கல் சூளைக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக நான் கர்ப்பமானேன். இதனையடுத்து 2 வீட்டு பெற்றோரும் சேர்ந்து 2020 ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து வைத்தனர்.

    திருமணமான சில மாதங்களிலேயே எனக்கும் எனது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு நாள் என்னை அவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற போது கோபத்தில் கீழே தள்ளி விட்டார். இதனால் கர்ப்பம் கலைந்தது. மேலும் எனது கணவரின் தாய், தந்தை ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினர்.

    இதற்கிடையே நான் 2-வது முறையாக மீண்டும் கர்ப்பமானேன். அப்போது எங்கள் 2 பேருக்கு ஏற்பட்ட தகராறில் தாக்கியதில் 2- வது கர்ப்பமும் கலைந்தது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனது கணவரிடம் கோபித்துக்கொண்டு எனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தேன்.

    சம்பவத்தன்று எனது செல்போனில் கணவரின் டி.பியை பார்த்தேன். அப்போது அதில் அவர் வேறு ஒரு பெண்ணை திரு மணம் செய்த புகைப்படத்தை வைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். எனவே என்னை சிறுவயதில் பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×