search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வேலை வாங்கி தருவதாக ேதாழியிடம் ரூ.7 லட்சம் ேமாசடி
    X

    அரசு வேலை வாங்கி தருவதாக ேதாழியிடம் ரூ.7 லட்சம் ேமாசடி

    • திருமங்கலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ேதாழியிடம் ரூ.7 லட்சம் ேமாசடி நடந்துள்ளது.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சோனை மீனா நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39), அண்ணாநகரை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி வாணி. காளீஸ்வரியும், வாணியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.

    கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு வாணிக்கு அரசு ேவலை கிடைத்துள்ளதாக காளீஸ்வரியிடம் கூறியுள்ளார். உனக்கும் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார். இந்த வார்த்தையை நம்பிய காளீஸ்வரி, தனது தோழியான வாணி மற்றும் அவரது கணவர் கண்ண னிடம் ரூ.7 லட்சம் பணத்தை வங்கி மூலம் மாற்றி உள்ளார்.

    ஆனால் இதுவரை வேலையும் வாங்கி தரவில்லை, மேலும் பணத்தையும் திருப்பி தரவும் மறுத்துவிட்டார்கள். ஆகவே இதுகுறித்து காளீஸ்வரி திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பே ரில் விசாரணை நடத்திய போலீசார் வாணி மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தை சேர்்நதவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்்ந்த சேதுராமன் மனைவி பாண்டிசெல்விக்கு ஒரு சென்ட் ரூ.60 ஆயிரத்திற்கு கிரையம் பேசி மொத்தம் 6 சென்ட் விற்பதற்காக பேசி ரூ.1 லட்சத்தை முன் பணமாக பெற்றுக்கொண்டனர். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் அவர்கள் அந்த இடத்தை பாண்டிசெல்விக்கு கிரையம் செய்து தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து பாண்டிசெல்வி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×