search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
    X

    புளியங்குடியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.




    புளியங்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

    • ராஜா எம்.எல்.ஏ.வுக்கு நகரச் செயலாளர் அந்தோணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • காமராஜர், தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து ராஜா எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.

    புளியங்குடி:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ. நேற்று புளியங்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு புளியங்குடி காமராஜர் சிலை முன்பு நகரச் செயலாளர் அந்தோணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து காமராஜர் சிலை, காந்தி சிலை, முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து ராஜா எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார். நிகழ்சியில் புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன், வாசுதேவநல்லூர் சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ. , பொதுக்குழு உறுப்பினர்கள் பத்திரம் சாகுல்ஹமீது, வேல்சாமி பாண்டியன், துணை செயலாளர்கள் காந்திமதியம்மாள், கருப்பசாமி, கவுன்சிலர்கள் பொன்னுதுரைச்சி, கார்த்திக், உமாமகேஷ்வரி, ராஜேஸ்வரி, வள்ளி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், பெருமாள், அருணாசலம் மற்றும் காஜா மைதீன், முன்னாள் நகர் மன்ற தலைவர் வெங்கட்ராமன், தி.மு.க. நிர்வாகிகள் தம்பிதுரை, குரூராஜ், விக்ரம் மணிகண்டன், மைதீன், அருணாசலம், அய்யனார், சுப்பு, குழந்தை ராஜ், சேதுராமன் மீனாட்சி சுந்தரம், மணிமாறன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×