search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடியில் முதல்-அமைச்சர் வருகை குறித்த துண்டு பிரசுரம்-பிரசார வாகனம் -  ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    துண்டு பிரசுரத்தை ராஜா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு வழங்கிய போது எடுத்த படம்.


    புளியங்குடியில் முதல்-அமைச்சர் வருகை குறித்த துண்டு பிரசுரம்-பிரசார வாகனம் - ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    புளியங்குடி:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நலதிட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தென்காசி மாவட்டதிற்கு நாளை வருகிறார்.

    துண்டுபிரசுரம்

    இந்நிலையில் முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் கமீது வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    பிரசார வாகனம்

    மேலும் முதல்-அமைச்சரின் வருகையை தெரிவிக்கும் வகையில் பிரசார வாகனத்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்சியில் நகர தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




    Next Story
    ×