search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Mathiventhan"

    • ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளார்.
    • அமைச்சரின் உடல் நிலையை டாக்டர்கள் காண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கோவை:

    தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன் (வயது 40). இவர் குடல் இறக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று கோவைக்கு வந்த அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் காண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    அமைச்சர் மதிவேந்தன் ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் உள்ள அறை எண் 103-ல் தங்கி உள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனை முடிவில் குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுமா அல்லது சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படுமா என்பது தெரிய வரும்.

    • தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கடந்த டிசம்பர் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை விவசாயிகளுடன் சந்தித்து மனு வழங்கினேன்.

    கோவில்பட்டி:

    வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கடந்த டிசம்பர் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை விவசாயிகளுடன் சந்தித்து மனு வழங்கினேன்.

    வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 3-ன் கீழ் இருக்கும் காட்டுப் பன்றிகளை அட்டவணை 5-ன் கீழ் இருக்கும் பட்டியலில் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அப்போது தான் காட்டுப் பன்றிகளை அழிக்க அரசின் முன் அனுமதி தேவைப்படாது. கடந்த 2016-ம் ஆண்டு, காட்டுப் பன்றிகளை தீங்கு விளைவிக்கும் உயிரினமாக அறிவித்து அட்டவணை 5-ன் கீழ் கொண்டுவர, உத்தரகாண்ட் மற்றும் பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதி ஓராண்டுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டது.

    அதேபோல, காட்டுப் பன்றிகளை அட்டவணை 5-ன் கீழ் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதுவரை இடைக்கால தீர்வாக, கேரள அரசைப் போல, தமிழ்நாடு வனத் துறை மூலம் உள்ளாட்சி அமைப்பு களுக்கு அதிகாரம் கொடுத்து கிராமக் குழுக்கள் மூலம் காட்டுப் பன்றிகளை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், வன விலங்கு சட்ட நடை முறைகளைப் பார்த்து விட்டு, அரசு அதிகாரி களிடமும் கலந்தாலோ சித்து, உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி யளித்தார்.

    • கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • முதல் முறையாக தமிழக அரசு முன்வந்து பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்த உள்ளது.

    கோவை

    கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டலில் புனரமைக்க ப்பட்ட உணவகத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஓட்டல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் புதுபிக்கப்பட்டு வருகிறது.

    முதல் கட்டமாக சென்னை தீவுத்திடல் தமிழ்நாடு ஓட்டல் உணவகம், கோவை, கன்னியாகுமரி, நெல்லை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள உணவகங்கள் புதுபிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழ்நாடு ஓட்டல் உணவகங்களில் புதிய உணவு வகைகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த காலகட்டத்தில் தனியார் விடுதிகளுடன் போட்டியிடும் வகையில், அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல்கள் புதுபிக்கப்படுவதால் அதிக வருவாயை ஈர்க்க முடியும்.

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் முதல் முறையாக சுற்றுலா தளம் மேம்பாட்டு திட்டம் அறிமுகபடுத்தியுள்ளோம்,

    இதன் முலம் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து, அங்கு பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். குறிப்பாக கொள்ளிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி, பூண்டி உள்ளிட்ட ஏரிகள், பூம்புகார் ஆகியவற்றையும் புதுபிக்க உள்ளோம்.

    மேலும் இதுவரை தனியார் சார்பில் பலூன் திருவிழா நடத்தப்பட்டது. முதல் முறையாக தமிழக அரசு முன்வந்து பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்த உள்ளது. அதில் மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை இன்று ஆய்வு செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×