search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "committee"

    • தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழைய கட்டிட அலுவலகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
    • 28-ந் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும்

    கோவை,

    கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

    இதில் கோவை மாவட்டத்திற்கு ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பின்னர் இந்த 18 பேரும் வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுப்பர்.

    இன்று நடந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்-17 மாநகராட்சி கவுன்சிலர்கள்-100 மற்றும் 7 நகராட்சிகளில் உள்ள 198 கவுன்சிலர்கள், 33 பேரூராட்சிகளில் உள்ள 513 கவுன்சிலர்கள் என மொத்தம் 825 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சியில் தலா ஒன்று, காளியூர் பேரூராட்சியில் ஒன்று என மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. எனவே 822 கவுன்சிலர்கள் ஓட்டு போட போட்ட உள்ளனர்.

    தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழைய கட்டிட அலுவலகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

    தேர்தல் முடிக்கப்பட்டு இன்று மாலை பதிவான வாக்குகள் எண்ணப்படும். 28-ந் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கடந்த 34 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.
    • இருதரப்பினரும் தலா 6 பேர் கொண்ட பட்டியல் வழங்கி உள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 300ஆண்டுகள் பழமையான இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் கள்ளிப்பாளையம், வலையபாளையம், துத்தேரிபாளையம். உள்ளிட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த 34 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.

    இந்தநிலையில் தற்போது மீண்டும் விழா நடத்த மேற்படி 3 கிராமத்தை சேர்ந்த மக்கள் தீர்மானித்தனர்.இந்த நிலையில் ஒரு தரப்பினர் எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இன்று (நேற்று) இருதரப்பினரும் குழு தேர்வு செய்து பட்டியல் வழங்குவதாக கூறிச் சென்றனர். இந்த நிலையில்,நேற்று பல்லடம் தாசில்தாரிடம் இரு தரப்பினரும் பட்டியல் வழங்கினர். இது குறித்து தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் கூறியதாவது:-. இருதரப்பினரும் தலா 6 பேர் கொண்ட பட்டியல் வழங்கி உள்ளனர். இதனை சப்- கலெக்டருக்கு அனுப்பி வைத்து அவரது அறிவுறுத்தலின்படி விழா கமிட்டி தேர்வு செய்து, கோவில் விழா சிறப்பான முறையில் நடத்தப்படும் என்றார். இதற்கிடையே பல்லடம் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில், கள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் தங்களை விழாக்குழுவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

    • கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டது.
    • தீவனங்களின் விலை, மருத்துவ செலவுகள், பணியாளர்கள் ஊதியம் உயர்ந்துள்ளது.

    தாராபுரம் :

    தமிழகத்தில் விவசாயத்து க்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஆவின் நிறுவனத்துக்கு வழங்குகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டது. இதுவரை அதே விலை தான் வழங்கப்படுகிறது. கறவை மாடுகளுக்கு தேவையான உலர் மற்றும் அடர் தீவனங்களின் விலை, மருத்துவ செலவுகள், பணியாளர்கள் ஊதியம் உயர்ந்துள்ளது.எனவே பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைக ளுக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 45 ரூபாய் வழங்குகிறது. எனவே அரசு பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 12 ரூபாய் வீதம் உயர்த்த வேண்டும்.

    கடந்த ஆண்டு வரை அமுல் மற்றும் வேறு மாநில மார்க்கெட்டிங் பெடரேசன்களில் இருந்து கலப்பு தீவனம், 50 கிலோ மூட்டையை 925 ரூபாய்க்கு கொள்முதல் செய்து மானியம் போக 725 ரூபாய்க்கு வினியோகிக்க ப்பட்டது.ஆவின் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் கலப்பு தீவன மூட்டை விலை 1,070 ரூபாயாகும். இதற்கு மானியம் போக 770 ரூபாய்க்கு வினியோகிக்கப்ப ட்டது. கடந்த ஆண்டு ஒன்றியங்களில் கலப்பு தீவன மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கலப்பு தீவன மானியமாக கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் வழங்கி 820 ரூபாய்க்கு விற்க வேண்டும்.

    ஆவின் ஒன்றியம், பிற மாநில கூட்டுறவு இணைய ங்களில் இருந்து பெற்று பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கலப்புத்தீவன விலையை விட ஆவின் இணையத்தின் கலப்பு தீவன விலை கிலோவுக்கு 2.90 ரூபாய் அதிகமாக உள்ளது. இந்த விலையை குறைக்க வேண்டும்.ஆவின் ஒன்றியங்களில் கடந்த காலங்களில் லாபத்தில் இருந்து பால் உற்பத்தியாள ர்களுக்கு ஊக்கத்தொ கையாக அந்தந்த ஆண்டு வழங்கிய பாலுக்கு லிட்டருக்கு 50 பைசா முதல் 1.50 ரூபாய் வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கியது. ஆனால் கடந்த 7 ஆண்டு களாக ஊக்கத்தொகை வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் 3 ரூபாய் குறைத்ததால் ஆவின் இணையம், மாவட்ட ஒன்றியங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நுகர்வோருக்கு குறைத்து வழங்கிய 3 ரூபாயை மானியமாக வழங்க வேண்டும்.அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள், அங்கன்வாடி குழந்தைக ளுக்கு ஆவின் பால் பவுடர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    பால் உற்பத்தியாளர்கள் இணையம், ஆவின் மாவட்ட ஒன்றியங்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை நேரடியாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல 1999 - 2000ம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி வாட்ச் டாக் கமிட்டி அமைத்து இரு அனுபவம் வாய்ந்த நபர்களை நியமனம் செய்தனர்.அதே போன்று மீண்டும் கமிட்டி அமைக்க அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வ ருக்கு மனு அனுப்பப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பா.ஜனதா கட்சி பொதுச் செயலாளர் மோகன்குமார் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி செயற்குழு கூட்டம் ஏரிப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    முன்னதாக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் ஏரிப்பாக்கம் கூட்ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பட்டியல் அணி மாநில செயற்குழு கூட்டம் மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் செல்வம், அசோக்பாபு எம்.எல்.ஏ. மாநில பா.ஜனதா கட்சி பொதுச் செயலாளர் மோகன்குமார் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசின் பட்ஜெட்டில் பட்டியல் இன சமூக மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் நலத்திட்டங்களை அமிர்த கால பட்ஜெட்டாக அறிவித்த மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பட்டியலின் செயற்குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
    • மான்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அலங்கியம், குண்டடம் உட்பட பல்வேறு பகுதிகளில் மான், மயில், காட்டுப்பன்றிகள், விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவருகின்றன.வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்துவருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திலும் மான், மயில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.விவசாயிகளுக்கு பதில் அளித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் பேசியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.மயில் தேசிய பறவை என்பதால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசுக்கு தொடர்ந்து அறிக்கை அனுப்பி வருகிறோம்.

    பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் காடுகள் அல்லாத பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் உள்ளதாக முந்தைய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அவ்விவரங்கள் ஏற்கனவே அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மான்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
    • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், நீதிமன்ற விசாரணை விவரம் உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வையும் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்வதற்காக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் பிரிவான போக்சோவில் பதிவாகும் வழக்குகளில் போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

    புதிய நடைமுறை

    அதாவது அந்த வழக்கு குறித்த விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலருக்கு உடன் இருந்து உதவ குழந்தைகள் நலக் குழுமத்திடம் இருந்து ஒரு நபரை வேண்டி பெறுதல், அரசின் இடைக்கால நிவாரணம் பெறுதல், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், நீதிமன்ற விசாரணை விவரம் உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வையும் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்வதற்காக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளார்.

    அதன்படி, புகார்தாரர்களின் மொபைல் போனுக்கு வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி மூலம் விசாரணை விபரத்தை அனுப்பும் முறையை நாட்டில் முதல் முறையாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    நெல்லையில் 4 பேர் குழு

    இதுகுறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறுகையில், தென்மண்டல ஐ.ஜி. உத்தரவினை நெல்லை மாவட்டத்திலும் நடைமுறைபடுத்தி உள்ளோம். இதற்காக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னபூரணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்டப்டு உள்ளது. இந்த குழுவில் 4 பேர் செயல்படுவார்கள்.

    அவர்கள் ஹலோ போலீஸ் வாட்ஸ் அப் எண் மூலமாக போக்சோ வழக்கின் விபரங்களை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரிவிப்பார்கள். மேலும் அவர்களின் சந்தேகங்களை கேட்டறிந்து உரிய விளக்கம் அளிப்பார்கள். இதன் மூலம் போக்சோ குற்றவாளிகளுக்கு சீக்கிரம் தண்டனை கிடைக்கும் என்றார்.

    • ஜவுளித்தொழில் 50 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது.
    • லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்–பூர் :

    நூற்பாலைகளுக்கு விவசாயிகள் நேரடியாக பஞ்சை விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரிக்கு சைமா சங்க தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளித்துறை மந்திரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று பாதிப்பு, அபரிமிதமான நூல் விலை உயர்வால் திருப்பூர் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி, விசைததறி, கைத்தறி ஜவுளித்தொழில் 50 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் நடப்பு ஆண்டுக்கான பருத்தி சீசன் தொடங்கும்போது, மத்திய அரசு கவனமாக செயல்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் ஜவுளித்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு விடும்.

    தேவைக்கு மேல் கொள்முதல் செய்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்கும் பெரும் வியாபாரிகள், ஒழுங்குமுறை விற்பனை கொள்கை அறிவிக்கப்பட்டிருந்தும், முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கும் இந்திய பருத்தி கழக நிறுவனம் ஆகியவற்றால் நூல் விலை உயர்வு, பற்றாக்குறைக்கு காரணம் ஆகும். இதற்கான தீர்வுகளையும் எங்கள் சங்கம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.

    விவசாயிகளுக்கு நியாயமான ஆதரவு விலையை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் விவசாயிகள் நேரடியாக பஞ்சு அரைப்பவர்களுக்கும், நூற்பாலைகளுக்கும் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நியாயமான விலையை கொடுக்க வியாபாரிகள் மறுக்கும்போது அல்லது கொள்முதல் செய்ய வராதபோது இந்திய பருத்தி கழகம் தலையிட்டு அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி கொள்முதல் செய்த பருத்தியை அதிகமாக வாங்கி இருப்பு வைக்கும் வியாபாரிகளை தவிர்த்து உற்பத்தி செய்யக்கூடிய நூற்பாலைகளுக்கு விற்க வேண்டும்.

    பருத்தி, பஞ்சு இருப்பு திருப்தியாக இருக்கும்போது கூட உள்நாட்டு உற்பத்திக்கு போதுமான அளவு வினியோகம் செய்து மீதம் உள்ள இருப்பை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு அனுமதிக்க வேண்டும். அரசு ஏற்கனவே அறிவித்தபடி பருத்தி, பஞ்சு விசயத்தில் நிபுணத்துவம் உள்ள குழுவை அமைத்து, பருத்தி அதிகம் விளைவித்தல், வியாபாரிகள், இந்திய பருத்தி கழகம் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசின் கொள்கைக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 3 மாதத்துக்கு ஒருமுறை அந்த குழு கூடி தேவையான பரிந்துரைகளை தர வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    • பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதி, பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார்கள் கமிட்டிகளை அமைத்திட வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16வது திருப்பூர் மாவட்ட மாநாடு தனியார் திருமணமண்டபத்தில்நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் மைதிலி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் சாவித்திரி, சங்க நிர்வாகிகள் வசந்தி, செல்வி, லட்சுமி, சரஸ்வதி, பானுமதி, கவிதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட செயலாளர் பவித்ரா தேவி வரவேற்றார். மாநிலச் செயலாளர் பொன்னுத்தாய், மத்தியகுழு உறுப்பினர் பிரமிளா, மாநில செயற்குழு உறுப்பினர் கிரிஜா, ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

    திருப்பூர் மாவட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்து பெண்கள் வந்து வேலை செய்து வருகிறார்கள். பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதி , பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார்கள் கமிட்டிகளை அமைத்திட வேண்டும். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர் . ஆனால் மருத்துவமனை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது . மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்ந்த போதும் , படுக்கை வசதி ,குடிநீர், மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையாக உள்ளது. அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும். திருப்பூர் மாநகராட்சியாகவும், ஸ்மார்ட் சிட்டியாகவும் தரம் உயர்ந்து உள்ளது. ஆனால் வார்டுகளில் குப்பை ,சாக்கடை தூர் வாராமல் தேங்கி இருக்கக்கூடிய நிலையிலும், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாமலும் இருப்பதால், மழைநீர் வீடுகளில் புகுந்து விடும் நிலையாக உள்ளது .

    ஆகையால் அடிப்படை வசதிகள் துரிதமாக செய்து தர வேண்டும். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக அகற்றிட வேண்டும். தகுதியுடைய அனைவருக்கும் அரசு நலத்திட்டங்கள் முறையாக வழங்க வேண்டும் ்உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் வழக்கறிஞர் தமயந்தி, டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் மணிகண்டன், எஸ். எப். ஐ. சம்சீர் அகமது, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் பரமசிவம், மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சபரிமலையில் ஆய்வு செய்ய கேரள ஐகோர்ட்டு நியமித்த 3 பேர் குழுவினர் பக்தர்களுக்கு நிலக்கல்லிலும், பம்பையிலும் அரசு செய்துள்ள வசதிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர். #Sabarimala #KeralaHC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந் தேதி மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.

    வழக்கமாக மண்டல பூஜை காலத்தின் போது சபரிமலை கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து அதிக அளவு ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்குச் செல்வார்கள். இதனால் முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ஆனால் தற்போது சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலை செல்லும் இளம்பெண்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் இந்த முறை குறைந்தது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களிடம் போலீசார் கெடுபிடியாக நடந்து கொள்வதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கேரள ஐகோர்ட்டும் இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

    இதனால் சபரிமலையில் பக்தர்களிடம் கெடுபிடி குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

      சபரிமலை சன்னிதானத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

    நேற்று ஒரே நாளில் சபரிமலைக்கு 68 ஆயிரத்து 315 பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை காலத்தில் இந்த அளவுக்கு அதிக பக்தர்கள் சபரிமலை சென்றது இதுதான் முதல் முறையாகும். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் அங்கு அரவணை, அப்பம் பிரசாதம் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் தேவசம் போர்டுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

    சபரிமலையில் போலீஸ் கெடுபிடிகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு சபரிமலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமன் , ஸ்ரீஜெகன், டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை நியமித்தது.

    இந்த குழு நேற்று சபரிமலை சென்று தங்களது ஆய்வு பணியை தொடங்கியது. முதலில் நிலக்கல்லில் அவர்கள் ஆய்வு செய்தனர். அதன் பிறகு அங்கிருந்து கேரள அரசு பஸ் மூலம் பம்பை சென்ற அந்த குழுவினர் அங்கும் பக்தர்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களை கேட்டனர். சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

    தங்களது முதல் கட்ட ஆய்வு பற்றி கருத்து தெரிவித்த 3 பேர் குழுவினர் சபரிமலை வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லிலும், பம்பையிலும் கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இந்த குழுவினர் இன்று சபரிமலை சன்னிதானம் சென்றனர். அங்கும் அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிறகு அவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் கேரள ஐகோர்ட்டு உத்தரவுகளை பிறப்பிக்கும்.  #Sabarimala #KeralaHC


    கோவில்களில் நடைபெறும் தவறுகளை தடுக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று எச்.ராஜா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #HRaja #BJP

    மதுரை:

    மதுரையில் பா.ஜனதா மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 282 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 350 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும். இதை யாராலும் தடுக்க முடியாது.

    ராகுல்காந்தி ரபேல் விமானம் பற்றி கூறும் தகவல்களை யாரும் நம்ப வில்லை.

    தமிழகத்தில் தினமும் நன்றாக பூஜை நடந்துகொண்டிருந்த கோவில்களைத்தான் இந்து சமய அறநிலையத்துறை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களின் நிலையை அறநிலையத்துறை தெரியப்படுத்த வேண்டும்.


    சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 80-க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களின் சொத்துக்கள், பழமையான பொருட்கள் பற்றிய ஆவணங்கள் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

    சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்புக்கு எதிராக தேவசம்போர்டு மறு சீராய்வு மனு செய்ய உள்ளதை வரவேற்கிறேன். அதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கோவில்களில் நடக்கும் தவறுகளை தடுக்க கோவில் வாரியாக குழுக்கள் அமைக்க வேண்டும். கோவில்களின் வருமானத்தில் 18 சதவீதத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்து சமய அறநிலையத்துறை விதி. ஆனால் கோவில்களின் முழு வருமானத்தையும் அதிகாரிகளின் சம்பளம், ஆடம்பர செலவுகளுக்காக அறந்லையத்துறை எடுத்துக் கொள்கிறது.

    தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் 2600 சிலைகள் வெளிநாடுகளில் இருக்கிறது என்றும், அவை மீட்கப்படாததற்கு காரணம், கோவில் சொத்துக்களின் பதிவுகள் இல்லாததுதான் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்த சிலைகளை தமிழகம் கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #HRaja #BJP

    சிறைச்சாலையில் ஏற்படும் முறைகேடுகள் போன்றவை குறித்து ஆய்வு செய்து சீரமைக்க முன்னாள் நீதிபதி அமிடாவா ராய் தலைமையில் மூவர் குழுவை இன்று உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    சிறையில் கைதிகளுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்கள், சிறையில் கைதிகளின் அதிக எண்ணிக்கை மற்றும் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டுவர சிறைத்துறை சீரமைப்பு குழு ஒன்றை உச்சநீதிமன்றம் உருவாக்க முடிவு செய்திருந்தது.

    இதற்கான உத்தரவை கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் நீதிபதி அமிடாவா ராய் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மூவர் குழுவானது நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளை சீரமைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும் எனவும், சிறைச்சாலைகளை ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt
    ×