என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடம்.
சில்வர் பட்டறை, சுவீட் கடை எரிந்து சேதம்
- சில்வர் பட்டறை, சுவீட் கடை எரிந்து சேதமானது.
- போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
செல்லூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் அகிம்சாபுரம் 4-வது தெருவில் சில்வர் பட்டறை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு அருகில் சுவீட் கடை உள்ளது.
நேற்று இரவு இவர் பட்டறையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை பட்டறையில் இருந்து புகை வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் பட்டறைக்குள் தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது. தொடர்ந்து இனிப்பு கடைக்கும் தீ பரவியது. தல்லாகுளம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இரு கடைகளிலும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் சில்வர் பட்டறையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






