search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தையல் கடையில் தீ விபத்து
    X

    கடையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

    தையல் கடையில் தீ விபத்து

    • சிறிது நேரத்தில் மளமளவென பரவி தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் வாடி வாசல் கடைத்தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 62). இவர் அதே பகுதியில் தையல் கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் இவர் திருப்பதிக்கு சென்று விட்டு இன்று அதிகாலை தஞ்சைக்கு வந்தார். பின்னர் கடையை திறந்து வாசலில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கடைக்குள் தீ பற்றியது. சிறிது நேரத்தில் மளமள வென பரவி தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. திடுக்கிட்டு எழுந்த கதிரேசன் ஓடி சென்று வாளியில் தண்ணீர் நிரப்பி ஊற்றினார்.

    இருந்தாலும் தீ மளமளவென எரிந்த தால் கட்டுப்படுத்த முடியவி ல்லை.இது குறித்து தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருந்தாலும் கடையின் பெருமளவு பகுதி எரிந்தது. தையல் எந்திரம் மற்றும் அனைத்து பொருட்கள் எரிந்து சேதமானது.

    இது பற்றிய புகாரின் பேரில் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின் கசிவால் தீப்பிடி த்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×