search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Severe pain"

    • கடைக்காரர்கள் பலர் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர்.
    • இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்த மான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாநகராட்சி மூலம் மாதந்தோறும் வாட கை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடைக்கா ரர்கள் பலர் பஸ் நிலை யத்தில் உள்ள நடைபாதை யை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களி லேயே பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் நடைபாதை ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என புகார் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விட்டார்.

    அதன் பேரில் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் இன்று காலை பஸ் நிலையத்திற்கு சென்று நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றினர். மேலும் பஸ் நிலையத்துக்குள் பொதுமக்களுக்கு இடை யூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் காற்றை பிடுங்கி விட்டனர்.இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூறுகையில், பஸ் நிலை யத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடை வைப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது. அவை விரைவில் சீரமைக்கப் படும். மேலும் பஸ் நிலை யத்திற்குள் வாகனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பஸ் நிலையத்திற்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வருபவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர்.
    • மழை நீரை அகற்றும் பணியில்கொட்டும் மழையிலும்அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் நேற்றுஇரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளை நீராக பெருக்கெடுத்து ஓடுகிறதுபண்ருட்டி போலீஸ் லைன் 3வது தெருவில் மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்தது பண்ருட்டி பகுதிகளில் உள்ள ஏரி,ஆறு,குளங்களில் நீர் நிரம்பி வழிகிறது. கனமழை காரணமாக வருவாய்த்துறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தங்களது அலுவலகங்களில் தங்கி இருந்து மழை பாதிப்புகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில்கொட்டும் மழையிலும்அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×