search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையை, பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- முதல்- அமைச்சருக்கு மனு
    X

    மயிலாடுதுறையை, பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- முதல்- அமைச்சருக்கு மனு

    • 40 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நேரடி, விதைப்பு பயிர்கள் முற்றிலும் சேதம்.
    • விவசாய தொழிலாளர்கள் ஏழை குடும்பங்களுக்கு மழை நிவாரணம் ரூ. 10ஆயிரம்.

    சீர்காழி:

    கனமழை பாதித்த சீர்காழி பகுதியை தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது, கனமழையால் சீர்காழி வட்டாரத்தில் 40ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நேரடி, விதைப்பு பயிர்கள் முற்றிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.2021 - 22 பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கவில்லை.

    பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரண தொகை வழங்குவதுடன் 100சதவீதம் மானியத்தில் உரம் வழங்கிடவேண்டும்.

    2022 - 23 பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கிடைத்திட உத்திரவாதம் அளித்திடவேண்டும்.சிறப்பு திட்டத்தின்கீழ் அனைத்து பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்திடவேண்டும், விவசாய தொழிலாளர்கள் ஏழை குடும்பங்களுக்கு மழைநிவாரணம் ரூ.10ஆயிரம் வழங்கிடவேண்டும், மழையால் சேதம்அடைந்த கிராமப்புற, நகர்புற சாலைகளை உடனடியாக செப்பனிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×