search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை நீர் கால்வாய் சீரமைப்பு
    X

    மழை நீர் கால்வாய் சீரமைப்பு

    • முள்ளிக்கொரை பகுதியில் உள்ள கழிப்பிடத்திற்கு கீழ் உள்ள இடத்தில் மழை நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்து வந்தது
    • பணியினை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு முள்ளிக்கொரை பகுதியில் உள்ள கழிப்பிடத்திற்கு கீழ் உள்ள இடத்தில் மழை நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி சுதாகரிடம் தெரிவித்தனர். பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    நகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கவுன்சிலர் ஜெயலட்சுமி சுதாகர் முன்னிலையில் வைரம், கோவிந்தராஜ், கிருஷ்ணன் மற்றும் மூர்த்தி ஆகியோரின் உதவியுடன் மழைநீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. இவர்களது பணியினை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    Next Story
    ×