search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை சீரமைக்க கோரிக்கை
    X

    சாலையை சீரமைக்க கோரிக்கை

    • அருப்புக்கோட்டையில் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை 12-வது வார்டில் மகாலிங்கம் மூப்பனார் தெரு, பெருமாள் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை கொட்டி பல நாட்கள் ஆகிவிட்டது. இதனால் இந்த பகுதி மக்கள் கற்களில் நடப்பதற்கு சிரமமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நடப்பதற்கும், சைக்கிளில் சென்று வருவதற்கும் சிரமமாக இருக்கிறது என்றும் கூறினர். இந்தப் பகுதியில் குடிநீர் வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    விரைவில் எங்கள் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அந்த வார்டு கவுன்சிலர் அல்லிராணியிடம் கேட்டபோது, விரைவில் சாலை சீரமைக்கப்படும். குடிநீர் விநியோகமும் சரிசெய்யப்படும் என்றார்.

    Next Story
    ×