search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வார்டு குழு பகுதி சபா கூட்டம்
    X

    பகுதி சபா கூட்டம் நடந்தது.

    வார்டு குழு பகுதி சபா கூட்டம்

    • பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டவில்லை.
    • கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்–குட்பட்ட கீழத்தென்பாதி 17-வதுவார்டில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கவுன்சிலர் ரம்யாதனராஜ் தலைமை வைத்தார்.

    துணைத்தலைவர் சுப்பராயன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், கணக்கர் ராஜகணேஷ் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆணையர் வாசுதேவன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பின்பு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில் பொதுமக்கள் கீழத்தென்பாதி நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும் புதிய கட்டிடம் கட்டவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் சமுதாயக் கூடத்தில் கல்வி கற்கும் நிலை இருந்து வருகிறது.

    மாணவ- மாணவிகளின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும். 17 வது வார்டில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிசை பகுதி நிறைந்த இப்பகுதியில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் வார்டு குழு உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×