search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் பனிப்பொழிவு"

    • பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
    • குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகஅளவில் பெய்தது. இதன் காரணமாக தற்போது அணை, ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.

    இந்த நிலையில் மார்கழி மாதம் தொடக்கத்தில் இருந்தே சேலம் மாவட்டத்தில் பனி, குளிரின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிர், பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

    தினமும் மாலை 3 மணிக்கு தொடங்கும் குளிர், பனி மறுநாள் காலை 11 மணி வரை நீடிப்பதால் அந்த நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    தொடர்ந்து பனி, குளிரின் தாக்கத்தால் பொதுமக்கள் சளி, காய்ச்சல், இரும்பலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் இந்த குளிரால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள். மேலும் பனியின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்படுகிறது.

    இன்று காலையும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் காலை நேரத்தில் குளிரில் இருந்து தப்பிக்க சிலர் சாலையோரங்களில் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.

    மேலும் மலைப்பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றன. மேலும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது.

    குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது. எதிரில் யார் நிற்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதே போல் சேலம் மாவட்டத்தில் உள்ள மற்ற சமவெளி பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கம்பளி ஆடைகள், குல்லா அணிந்து சென்றனர்.

    • வாகனங்கள் பனியில் புதைந்துள்ளன.
    • கடும் பனிபொழிவால் 60 மில்லியன் பொதுமக்கள் பாதிப்பு.

    நியூயார்க்:

    புவி வெப்பமயமாதல் தாக்கத்தின் மறுவடிவமாக மாறிவரும் பருவநிலை வளர்ந்த நாடு, ஏழை நாடு என பார்க்காமல் எல்லா நாடுகளையும் கடுமையாக பாதித்து வருகிறது.


    கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன. கான்சாஸ், இண்டியானா, மிசோரி, கென்டக்கி, லுயிஸ்வில்லி உள்ளிட்ட 7 மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.

    கான்சாஸ் மற்றும் இண்டியானா மாகாணங்களில் 7.7 அங்குலங்கள் (19.5 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

    கென்டக்கியின் லெக்சிங்டன், பனிப்பொழிவில் சாதனையை படைத்துள்ளது. அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பனியில் புதைந்துள்ளன.


    வர்ஜீனியா, இண்டியானா, கன்சாஸ் மற்றும் கென்டக்கி ஆகிய இடங்களில் பனிப் பொழிவால் நூற்றுக்கணக்கான கார்கள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

    வடகிழக்கு கன்சாஸில் உள்ள நெடுஞ்சாலைகள் நடக்க முடியாத அளவுக்கு இருப்பதால் அந்த சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால் 60 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் பனிப் பொழிவு மேலும் அதிகரிக்கும் என அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேகமாக வெப்பமடையும் ஆர்க்டிக் துருவச் சுழலின் அதிகரிப்பு காரணமாக பனிப்பொழிவு அதிகரிக்கலாம் என ஆய்வுகள் கூறியுள்ளது.

    • தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம்.
    • குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனிக்காலம் ஆகும். ஆனால் நடப்பாண்டு புயல் மழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் தென்படுகிறது.

    அங்கு கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.


    ஊட்டியில் அவலாஞ்சி, தலைகுந்தா, காந்தள் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் உறை பனி நிலவி வருகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளை கம்பளம் விரித்தாற்போல காணப்படுகிறது. மேலும் பச்சை புல்வெளிகள் மற்றும் வாகனங்களில் பனிப்படலத்தை பார்க்க முடிகிறது.

    சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள், புல்வெளிகளில் படர்ந்துள்ள பனிகளை கையில் எடுத்து விளையாடி வருகின்றனர்.

    • புத்தாண்டில் கூட ஜம்மு & காஷ்மீரின் எல்லையில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் தியாகம் அசாத்தியமானது.

    இந்தியாவில் உள்ள அனைவரும் இன்று 2025 ஆம் ஆண்டு பிறந்ததை கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் ஜம்மு & காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சுடும் வெப்பத்திலும் கடும் குளிருக்கும் நடுவிலும் எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் தியாகம் அசாத்தியமானது. ராஜஸ்தானின் கோடை வெப்பம் முதல் லடாக், ஜம்மு & காஷ்மீர், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களின் கடும் குளிரும் ராணுவ வீரர்கள் தங்களது பணியில் உறுதியாக இருந்தனர்.

    இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவிற்கு இடையே இந்திய ராணுவத்தினர் எல்லையை பாதுகாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

    • ‘ஒயிட் கிறிஸ்துமஸ்’ மலை போல் ஆன சிம்லா
    • வாகனம் சறுக்கி விழுந்த விபத்துகளால் 4 பேர் பலி

    சிம்லா:

    இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதியாக இருப்பதால் இங்கு குளிர் பல நேரங்களில் மைனஸ் டிகிரிக்கும் சென்றுவிடும். இதனால் சுற்றுலாப் பயணிகள் இங்கு விரும்பி வருகின்றனர்.

    திருமணமான புது தம்பதிகள் தங்களின் தேன்நிலவை கொண்டாட அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

    இங்குள்ள மலை பிரதேசங்களில் பனிகள் படர்ந்து வெள்ளியை சிதறிவிட்டது போல் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதை யொட்டி சிம்லாவில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ஒயிட் கிறிஸ்துமஸ் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து அதிகரித்திருப்பதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் திணறி வருகின்றனர்.

    இந்நிலையில் சிம்லாவிற்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனங்கள் பனியில் சிக்கி சறுக்கில் விழுந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

    பயணிகளின் வருகையை குறைக்கவும் மேலும் உயிரிழப்புகளை தடுக்கவும் சிம்லாவை சுற்றி உள்ள 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 223 சாலைகளை அந்த மாநில அரசு மூடியுள்ளது.

    சிம்லாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை குறிப்பாக சனிக்கிழமை உச்சக்கட்ட பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    இந்த நிலையில் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு காணப் பட்டது. சாலை களில் மூடுபனி சூழ்ந்தது.

    திருச்சி, துறையூர், சேலம், மோகனூர், திருச்செங்கோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சூழந்த மூடுபனியால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவு பனிமூட்டம் காணப் பட்டதால் விபத்தை தடுக்கும் வகையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் இருந்ததால் வேலைக்கு செல்வோரும் அவதிப் பட்டனர்.

    • இன்று அதிகாலை பண்ருட்டியில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர்/

    கடலூர்:

    தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைப்பட்ட காலமான ஜனவரி, பிப்ரவாி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது. அதன் பின்னர் வளிமண்டல சுழற்சி காரணமாக அடிக்கடி மழையும் பெய்து வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை தை மாதத்தில் இருந்து பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும்.  கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம் பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதியம் அடிக்கக்கூடிய வெயில் இதமானதாக இருக்கிறது  ஆனால் இன்று அதிகாலை பண்ருட்டியில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பண்ருட்டியில் இருந்து நெய்வேலி, வடலூர் ,கும்பகோணம், தஞ்சை செல்லும் சாலை, பண்ருட்டி -சென்னைசாலை, பண்ருட்டி-கடலூர்சாலை, பண்ருட்டி சேலம் சாலை, பண்ருட்டி - அரசூர் சாலைகளில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்தில் சென்றதையும் காண முடிந்தது. பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். குளிர்ச்சியான சீதோஷன நிலையால் வீடுகளில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் உறைநிலைக்கு சென்றதுனிப்பொழிவு குறையும் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் இரவு நேரத்தில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.  மேலும் பகல் நேரம் தவிர காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரும்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பெரும்பாலானோர் சுவெட்டர், குல்லா போன்ற குளிர்தடுப்பு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியே வருகின்றனர். இந்த ஆண்டு வெயில், மழை, பனிப்பொழிவு என மாறி, மாறி வருவதால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பண்ருட்டி பகுதியில் இன்று பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது  இதனால் அதிகாலையில் பாதசாரிகள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் சிரமப்பட்டனர். கார்கள், வேன்கள், லாரிகள்,பஸ்கள் மிகுந்த சிரமத்துடன் பயணத்தை தொடர்ந்தனர்  ெரயில் நிலைய வளாகம் பனிப்பொழிவால் நிரம்பிருந்தது. காலையில் வந்த எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ெரயில்கள் கடும் பனிமூட்டத்துக்கு இடையே ரெயில் நிலையத்துக்குள் வந்து சென்றன. இதேபோல் சிதம்பரத்திலும் இன்று அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம் தெரியாத வகையில் பனிப்பொழிவு காணப்பட்டது.புவனகிரி பகுதியிலும் பனிப்பொழிவு அதிகளவில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.

    • தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
    • கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த ஆண்டு பரவலாக பருவமழை பெய்தது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையிலும், பனிப்பொழிவு குறையவில்லை. கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.

    காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன. காலை 9 மணி வரை மூடுபனி நீடித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

    கடந்த சில தினங்களாக அதிகாலையில் மட்டுமின்றி, காலை 8 மணி வரை தொடரும் மூடுபனியால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவியரும், வேலைக்கு செல்வோரும் குறித்த நேரத்திற்குள் எழுந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாவதாகவும், இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.
    • பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

    அரூர்,

    தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும்.

    கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த மூன்று நாட்களாக மழை பொழியவில்லை. தொடர்ந்து மழை நின்றதால், மாவட்டம் முழுவதும் கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பனி பொழிவும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டம் அரூர் மொரப்பூர் தீர்த்தமலை கோபிநாதம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவுகள் ஏற்பட்டது.

    அதிகாலை போலவே காலை 9 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. இன்று காலை சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு போடப்பட்டு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

    • மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும்.
    • தேசியநெடுஞ்சாலையில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருவதால் இங்குள்ள ஆறு, குளம், ஏரி, கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வழிகிறது. பொதுவாக ஆண்டுதோறும் மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியேகடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.

    பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய இந்த பனிப்பொழிவு தொடக்கத்தில் மிதமான நிலையில் இருந்தது. அடுத்து படிப்படியாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் அவதி கடந்த சில தினங்களாக இரவு 7 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு விடிய, விடிய கடுமையாக உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிற்குள் முடங்கிய நிலையில் உள்ளனர். இன்று வழக்கம் போல் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பண்ருட்டிவழியாக தேசியநெடுஞ்சாலை யில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது. இதனால் இந்த சாலைகளில் சென்ற வாகனங்கள் மிதமான வேகத்தில் வாகனத்தில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஹாரன் அடித்துக்கொண்டு ஊர்ந்து சென்றது.

    • கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
    • இந்த பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்களின்இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது. மேலும் வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    தற்போது மழை இல்லாததால் மாவட்டம் முழுவதுமே பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சவுண்டப்பூர், பாரியூர், மொடச்சூர், வடுகப் பாளையம், நல்ல கவுண்டன் பாளையம், நஞ்ச கவுண்டன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.

    எதிரே நிற்பவர்கள் கூட தெரியவில்லை. இதனால் இந்த பகுதியில் வந்து சென்ற வாகனங்கள் அனைத்தும் காலை நீண்ட நேரமாகியும் வாகனங்களின முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படி வந்து சென்றது.மேலும் வயல் வெளிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டு பனித்துளிகள் படிந்து இருந்தது.

    இந்த பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்களின்இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.

    கிராம பகுதிகளில் பொதுமக்கள் பனிப்பொழிவு மற்றும் குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர்காய்ந்தனர். மொத்தத்தில் கோபி செட்டி பாளையம் சுற்றுவட்டார பகுதியே பனிப்பொழிவால் சூழ்ந்து இருந்தது.

    • மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது.
    • பொதுமக்கள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருவதை காணமுடிந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதம் மிக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது. மேலும் கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் நாளை மறுதினம் மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் முழுவதும் அதிகாலையில் லேசான பனி மூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வந்தது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரம் தொடங்கிய குளிர்காற்று காலை வரை வீசி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் வழக்கத்தைவிட பனிமூட்டம் அதிகரித்து பனி பொழிவாக காணப்பட்டது.

    இதன் காரணமாக கடலூர், பாதிரிகுப்பம், திருவ ந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டா ம்பாக்கம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில் காலை 7.30 மணி வரை பனி குறையாமால் காணப்பட்டது. இதன் காரணமாக சாலை முழுவதும் பனி மூட்டம் சூழ்ந்து இருந்ததால் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கு எரிந்த படியும், ரயில்வே தண்ட வாளத்தில் பனிமூட்டம் சூழ்ந்து ள்ளதால் ரயில்களும் முகப்பு விளக்கு அணிந்தபடி சென்றதை காண முடிந்தது. மேலும் காலை நேரங்களில் கடும் பனி பொழிவும், பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயில், திடீர் மழை, மீண்டும் மாலையில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சீதோஷ்ண மாற்றம் உருவாகி பொதுமக்கள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருவதை காணமுடிந்தது.

    ×