search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு
    X

    அரூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

    • தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.
    • பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

    அரூர்,

    தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும்.

    கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த மூன்று நாட்களாக மழை பொழியவில்லை. தொடர்ந்து மழை நின்றதால், மாவட்டம் முழுவதும் கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பனி பொழிவும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டம் அரூர் மொரப்பூர் தீர்த்தமலை கோபிநாதம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவுகள் ஏற்பட்டது.

    அதிகாலை போலவே காலை 9 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. இன்று காலை சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு போடப்பட்டு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

    Next Story
    ×