search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் கடும் பனிப்பொழிவு  சாலையை கடக்க சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்
    X

    நாமக்கல்லில் கடும் பனிப்பொழிவு சாலையை கடக்க சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    இந்த நிலையில் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு காணப் பட்டது. சாலை களில் மூடுபனி சூழ்ந்தது.

    திருச்சி, துறையூர், சேலம், மோகனூர், திருச்செங்கோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சூழந்த மூடுபனியால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவு பனிமூட்டம் காணப் பட்டதால் விபத்தை தடுக்கும் வகையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் இருந்ததால் வேலைக்கு செல்வோரும் அவதிப் பட்டனர்.

    Next Story
    ×