search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
    X

    தருமபுரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

    • மழை நின்றதால், பனி பொழிய தொடங்கியுள்ளது.
    • காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை.

    தருமபுரி,

    கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் மழை இருந்து வந்தது.

    தற்போது மழை நின்றதால், பனி பொழிய தொடங்கியுள்ளது. இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், கொளகம்பட்டி, கிருஷ்ணா புரம், காரிமங்கலம், தீர்த்தமலை, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவுகள் ஏற்பட்டது.

    அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன.

    இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    Next Story
    ×