

கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கேசவதாஸ் (வயது 52).
இவர் மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் எலக்ட்ரீசி யனாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கேசவதாஸ் அம்மாண்டி விளையிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவர் மணவாளக்குறிச்சி பாலம் அருகில் செல்லும் போது அங்கு வந்த வேன் மோதியது. இதில் கேசவதாஸ் படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மணவாள க்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் பாலஜெகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.