அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் - ஆ.ராசா எம்.பி., முதல்-அமைச்சருக்கு கடிதம்

அவிநாசி வருமானம் மற்றும் தொழில் நகரமாக வளா்ச்சியடைந்து உள்ளது.38 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டதாக உள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவா் முதல்வா் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிா்வாகத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பூா் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி சுமாா் 38 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டதாக உள்ளது. குறிப்பாக கோவை-சேலம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவிநாசிக்கு நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் அளவிற்கு வருமானம் மற்றும் தொழில் நகரமாக வளா்ச்சியடைந்து உள்ளது. ஆகவே இப்பகுதி வளா்ச்சிக்கு சாதகமாக சூழ்நிலை ஏற்படுத்தும் வகையில் நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அவிநாசி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com