search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

    தஞ்சை மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்- கலெக்டர் தகவல்

    • கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக கார்த்திகேயன் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
    • தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக ஜெயலெட்சுமி பணிமாறுதல் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வரும் 22 தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருவிடைமருதூரில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த ஜானகிராமன், பூதலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அங்கு பணியாற்றி வந்த தாசில்தார் புண்ணியமூர்த்தி, கும்பகோணம் நகர நிலவரித்திட்ட தனிதாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், திருவிடைமருதூர் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இங்கு பணியாற்றி வந்த சித்ரா, கும்பகோணம் கலால் மேற்பார்வை அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய கார்த்திகேயன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சை அரசு கேபிள் டி.வி. நிறுவன தனி தாசில்தார் முருககுமார், பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாபநாசத்தில் பணியாற்றி வந்த சுஜாதா, தஞ்சை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அங்கு பணியாற்றிய சிவக்குமார், ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த சுமதி, பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் ரீட்டா ஜெர்லின், கும்பகோணம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த இளமாருதி, ஒரத்தநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய தமிழ்ஜெயந்தி, தஞ்சை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    நாகை அலகு முத்திரை கட்டண தனிதாசில்தாராக பணிபுரிந்த கஜேந்திரன், தஞ்சை கலால் மேற்பார்வை அலுவலராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய மலர்குழலி, பட்டுக்கோட்டை அலகு முத்திரை தான் கட்டண தனி தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    இங்கு பணியாற்றி வந்த மல்லிகா தேவி, தஞ்சை கலால் அலுவலக மேலாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த சுரேஷ், ஒரத்தநாடு தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்த ஜெயலெட்சுமி, தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக பணிமாறுதல் பெற்றுள்ளார்.

    தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக இருந்த சக்திவேல், தஞ்சை தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை தாசில்தாராக பணியாற்றிய மணிகண்டன், நாகை அலகு முத்திரைத்தாள் கட்டண தனி தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சை டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளர் வெங்கடேஸ்வரன், கும்பகோணம் தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் தாசில்தார் தங்கபிரபாகரன், தஞ்சை டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளராக பணி மாறுதல் பெற்றுளார்.

    பேராவூரணி தாசில்தார் அலுவலக கூடுதல் தலைமை இடத்து துணை தாசில்தார் சமத்துவராஜ், தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலக தலைமை உதவியாளராக பணியிடை மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×