search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கலெக்டர் சாருஸ்ரீ.

    தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • ரூ.1,500 வேலையளிக்கும் முகமைக்கு விடுவிக்கப்படும்.
    • மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டப்பணிகளை கண்காணிப்பதற்காக வெளிமுகமை முறையில் 100 எண்ணிக்கையிலான தொழில்நுட்ப உதவியாளர்கள் முற்றிலும் தற்காலிகமாக ஊக்க ஊதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

    இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணியிடத்திற்கான கல்வி தகுதிகள் டிப்ளமோ / பொறியியல் படிப்பில் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கட்டுமான பணியில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    5 வருடத்திற்கு மேலான அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வயது முதிர்வின் காரணமாக பணிஓய்வு பெற்றுள்ள உதவி பொறியாளர்கள் / பணி மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    ஊதியமுறைகளானவை பயனாளிகளின் வீட்டின் நிலைகளுக்கு ஏற்ப தவணை தொகைகள் விடுவிப்பதன் அடிப்படையில் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    ஒரு வீட்டிற்கான 4 நிலைகளில், ஊக்க த்தொகையாக பேஸ்மண்ட் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், ஜன்னல் மட்டம் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், கூரை மட்டம் நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம், பணி முடிவுற்ற நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம் ஆக கூடுதலாக ரூ.1,500 வேலையளிக்கும் முகமைக்கு விடுவிக்கப்படும்.

    இப்பணிக்காக ஊதியம் ஏதும் தனியாக வழங்கப்பட மாட்டாது.

    நிபந்தனை களானவை, நிலுவையிலுள்ள வீடுகள் "அனைவருக்கும் வீடு" மொபைல் செயலி மூலம் ஒவ்வொரு தொழில்நுட்ப உதவியா ளருக்கும் இணைக்கப்படும். பணியில் சேரும் தொழில்நுட்ப உதவியாளர்கள் வேலை யளிக்கும் முகமையின் கீழ் வந்ததாக கருதப்படுவர்.

    தனியார் எந்த வகையிலும் அரசுப்பணியில் உரிமை கோர இயலாது. (PMAY(G)) திட்டம் செயலாக்கம் முடிவுற்றதும் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.

    உரிய கல்விச்சான்று நகல் மற்றும் அனுபவ சான்று நகல் ஆகிய வற்றுடன் விண்ணப்பத்தை நேரடியாகவோ (அ) அஞ்சல் வழியாகவோ நாளை (05-ந் தேதிக்குள்) மேலாளர், மாவட்ட முகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவாரூர் என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×