search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓவியம் வரைய கற்றுத்தந்த போது 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி உதவியாளர்
    X

    ஓவியம் வரைய கற்றுத்தந்த போது 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி உதவியாளர்

    • வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார்.
    • போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், கஞ்சர பாலத்தை சேர்ந்தவர் கடற்படை அதிகாரி. இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த பள்ளியில் உதவியாளராக இருப்பவர் சத்யா ராவ் (வயது 40). சிறுமி வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் சத்யா ராவ் வசித்து வருகிறார்.

    இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வருவதால் மாணவிக்கு பாடம் கற்றுக் கொடுக்கவும், ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கவும் சத்யா ரா வ் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

    மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை சத்யா ராவ் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார்.

    வீட்டில் அவரது பெற்றோர் இருக்கும் நேரத்தில் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.

    மேலும் மாணவியின் நிர்வாண வீடியோவை தனது நண்பர்கள் 3 பேருக்கு அனுப்பி வைத்தார். அவர்களும் வீடியோவை காட்டி மாணவியை பணிய வைத்து கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.

    கடந்த மாதம் 3-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பலமுறை மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    கடந்த 6-ந் தேதி மாணவி மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதனை கண்ட அவரது தாய் மாணவியிடம் விசாரித்தார். அப்போது நடந்த சம்பவம் அனைத்தையும் தனது தாயிடம் மாணவி தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவியின் தாய் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சத்யாராவ் மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டு சத்யாராவை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×