என் மலர்
நீங்கள் தேடியது "மனோஜ் கைது"
- ஜேபி இன்ப்ராடெக் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு திவாலானது.
- மனோஜ் கவுருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
பிரபல ஜேபி குழு (Jaypee Group) நிர்வாக இயக்குனர் மனோஜ் கவுர், ஜேபி இன்ப்ராடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
இந்நிலையில், மனோஜ் கவுர் இன்று அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேபி இன்ப்ராடெக் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு திவாலானது, அதன் பிறகு பல சட்ட சிக்கல்களை ஜேபி நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.
மேலும், மனோஜ் கவர் பலரிடம் வீடு வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டு வீடு வழங்காமல் ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி, இந்த கைது நடவடிக்கை ஜேபி நிறுவனத்தின் நிதி மோசடி விசாரணையின் ஒரு பகுதியாகும்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதத்தில் டெல்லி, நொய்டா, காஜியாபாத் உள்பட மனோஜ் கவுருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
இதில், சுமார் ரூ.1.70 கோடி பணம், ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்து ஆணவங்கள் உள்ளிட்டவையை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இந்த நிலையில், நீண்டகாலமாக நடந்து வரும் ஜேபி குழுமத்தின் நிதி மோசடி விசாரணையின் கீழ், மனோஜ் கவுர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சயன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார்.
பின்னர் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில், மேத்யூ சாமுவேல் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் மேத்யூ சாமுவேலிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் டெல்லி விரைந்தனர். சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்தனர்.
இதனையடுத்து கொடநாடு விவகாரம் தொடர்பாக சயான், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் கைது செய்த சயான், மனோஜ் ஆகியோரை சென்னை தனிப்படை போலீசார் விமானம் மூலம் இன்று சென்னை அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்துவதற்காக போலீஸ் வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். சர்ச்சை வீடியோ வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.#KodanadEstate #KodanadVideo






