search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "additional charge sheet"

    கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது 500 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.
    பூந்தமல்லி:

    கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் (வயது 37) 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சையது அபுதாகிர், முபாரக் என்ற முகமது முபாரக் ஆகிய 2 பேர் மீதும் 500 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை நேற்று நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.
    ×