search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக காட்பாடி அரசு பள்ளி வளாகத்தில் வாழை தோரணங்கள் கட்டியுள்ள காட்சி.

    வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

    • டிரோன்கள் பறக்க தடை
    • முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை யையொட்டி வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரி வித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன் கிழமை) சென்னையில் இருந்து ரெயிலில் காட்பாடிக்கு வருகை தருகிறார்.

    அவர் இன்று மற்றும் நாளை (வியாழக்கிழமை) காட்பாடி, வேலூர் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    போக்குவரத்து மாற்றம்

    இதையொட்டி வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்தூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சேர்க்காடு மற்றும் இ.பி. கூட் ரோடு வழியாக வேலூருக்கு செல்ல வேண்டும்.

    குடியாத்தம் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வடுகன்தாங்கல், விரிஞ்சிபுரம் வழியாக வேலூர் பைபாஸ் செல்ல வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வரும் கனரகவாகனங்கள் சாத்துமதுரை, தங்ககோவில் வழியாக பெங்களுரூ பைபாஸ் சாலைக்கு செல்ல வேண்டும்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதிக்குள் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான் ஊர்திகள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான் ஊர்திகளை பறக்கவி டும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் காவல்து றையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×