search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கபாலீஸ்வரர் ஆலய வழிபாடுகளும் பலன்களும்!
    X

    கபாலீஸ்வரர் ஆலய வழிபாடுகளும் பலன்களும்!

    • ஸ்ரீ கற்பகாம்பாளை தரிசனம் செய்தால் சுபமங்களம் கிட்டும்.
    • கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர்.

    1. ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மனைத் தரிசனம் செய்த பின்பு, ஸ்ரீவெள்ளீஸ்வரரை தரிசனம் செய்து ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள அன்னை ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசனம் செய்தால் சுபமங்கள சவுபாக்கியம் கிட்டும். இது தரிசன நியதியுமாகும்.

    2. மகாசிவராத்திரி, மாத சிவராத்திரிகளில் ஸ்ரீகற்பகாம்பாளைத் தரிசித்து சிவ சிவ என்று கூறினால் நமது கர்ம வினைகள் குறைந்து பிறவிகள் தீரும்.

    3. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலில் சித்தர்கள் புறாக்களின் வடிவில் வாசம் செய்கின்றனர். எனவே, இங்குள்ள புறாக்களின் தரிசனம் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

    4. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் 3500-க்கும் மேற்பட்ட அதிஅற்புத உன்னத தேவதைகள் இருக்கிறார்கள். எனவே இப்பிரகாரத்தை வலம் வரும் பொழுது நல்ல எண்ணங்களையும், நியாயமான பிரார்த்தனைகளையும் மாத்திரமே மனதில் கொள்ள வேண்டும். வேறு எந்தவிதமான மாற்று எண்ணங்களுடன் இப்பிரகாரத்தை வலம் வருதல் கூடாது.

    5. தட்ச யாகத்தில் தட்சனின் யாகத்தை அழித்த கோபாவேசம் கொண்ட ஸ்ரீவீரபத்திரரை சாந்தப்படுத்தவதற்காக மகரிஷிகளும், முனிவர்களும் பனி மலையைக் கொண்டு அழுத்தி சுவாமியின் உக்ரகத்தைத் தணிக்க முயற்சித்தனர். தந்தையாகிய சிவனுடைய கோபம் தணிந்ததே அன்றி, ஸ்ரீவீரபத்திரரின் கோபம் சிறிதும் தணியவில்லை. பல்வேறு வடிவங்களில் ஸ்ரீவீரபத்திரருக்கு சித்தர்களும், மகான்களும் கோவில்கள் அமைத்தனர். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சிலா ரூபங்களில், மூலாதார சக்தியின் 500-வது பிரதி பிம்பமே ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீவீரபத்திர மூர்த்தி ஆவார்.

    6. மேற்குப் பார்த்த சூரியனை, சூரிய ஹோரையில் வழிபடுவது மிகவும் விசேஷமாகும். இவரை வழிபடுவதால் கர்பப்பை சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்திக்கான வழி கிட்டும்.

    7. இக்கோவில் ராகு, கேது பரிகார தலமாகும். இத்தலம் முந்தைய யுகங்களில் ராகு, கேது பரிஹார தலமாக விளங்கியது. இதுபோன்று எதிர் காலத்தில் ராகு, கேது பரிகார தலமாக அமையும் என்பது சித்தர்களின் வாக்காகும்.

    8. ஸ்ரீகபாலீஸ்வரர் கோவிலின் உற்சவ காலங்களில் வெயில் நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ் தானத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் சுவாமியை சுமந்து வரும் அடியார்களுக்கும் அளித்திடில் தொலைத்தொடர்பு துறையில் இருப்போர் மேன்மை அடைவர். தொலைத்தொடர்பில் இருக்கக் கூடிய இன்னல்கள் தீரும்.

    9. "எண்ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்பர். அந்த சிரசில் உள்ள கபாலம் மிகவும் முக்கியமானது. கபாலம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு கொடுக்கும் அபூர்வமான மூர்த்தி ஸ்ரீகபாலீஸ்வரர் ஆவார். கபாலம் சம்பந்தமான நோய்களுக்கு நிவர்த்தித் தலமாக இக்கோவில் அமைந்துள்ளது.

    10. நாம் காலையில் எழுந்தவுடன் ஒரு ரூபாய் அளவு உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு உச்சந்தலையில் தடவிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தடவும் பொழுது, ஸ்ரீகேசல குசலாம்பிகாயை நமஹ, ஸ்ரீதையல் நாயகியே நமஹ, ஸ்ரீகபாலீஸ்வராய நமஹ என்று சொல்ல வேண்டும். இதனால் கபாலம் சம்பந்தபட்ட நோய்கள் தணியும். உடலின் உஷ்ணமும் குறையும்.

    11. இக்கோவிலில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக விளக்கெண்ணெயுடன் பசு நெய் கலந்து, தீபம் இட்டு அன்னதானம் செய்திடில், எலும்பு முறிவு சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும். முறிந்த எலும்பானது விரைவாகக் கூடும்.

    12. இங்கு ஸ்ரீஜகதீஸ்வரர் தனிச்சன்னதி கொண்டுள்ளார். இது வாஸ்து பூஜைக்கு உகந்த இடமாகும். இவருக்கு வழிபாடு செய்திட வாஸ்து குற்றங்கள் குறையும்.

    13. ஒரு நாளைக்கு குறைந்தது பதிமூன்று கோபுர கலசங்களையாவது தரிசனம் செய்தல் விசேஷமாகும். இக்கோவிலில் பதிமூன்றிற்கும் மேலாகவே கோபுர கலசங்கள் உள்ளன. தினந்தோறும் கோபுர தரிசனம் செய்வதால் பாவங்கள் தீரும். இதனையே, `கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றார்கள் பெரியவர்கள். இக்கோவிலில் அருள்பாலிக்கும் துர்க்கையின் கலியுக திருநாமம் ஸ்ரீபஸ்பத்ரயாக்னி. அமர்ந்த கோலத்தில் மூன்று தேவியர் அருள்பாலிப்பது இச்சிவலாயத்தில் மிகவும் சிறப்புவாய்ந்தது.

    Next Story
    ×