search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சன்னதிகள்
    X

    மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சன்னதிகள்

    • கற்பகாம்பாள் சன்னிதியில் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது.
    • ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது.

    மூலஸ்தானம்

    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின்-றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க கற்பகாம்பாள் சன்னிதியில் இருந்த வந்தவுடன் இடது பக்கம் பிடி அரிசி பெட்டி காணப்படுகிறது. அதனருகில் சுவரில் விநாயகர் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள பாலகர்களைக் திரு துவார கடந்து சன்னிதியில் நுழைந்தால் ஈசன், பெரிய லிங்க உருவில் மேற்கு திசை பார்த்து காட்சி தருகிறார்.

    ஈசனின் ஐந்து முகங்களில் மேற்கு பார்த்த முகம் 'சத்யோஜாதம்' எனப்படுகிறது. இம்மூர்த்தி, வழிபடுபவருக்கு உடனே காட்சி தந்து அருள்புரியும் என்கின்றனர். பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு. சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.

    274 சிவத்தலங்களில் 40 தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்த சன்னிதிகள். அதில் ஒன்று நமது திருமயிலையில் உள்ளது சிறப்பு.

    சன்னதியின் வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து தெற்கு முகமாக ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மை, பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர், மாணிக்கவாசகரின் திருஉருவங்கள் மற்றும் சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் பேழையில் வைத்து வழிபடப்படுகின்றன.

    துர்கை

    கபாலீஸ்வரரின் கருவறையின் வடக்கு வெளிச்சுவரில் வடக்கு பார்த்து துர்கை வீற்றிருக்கிறாள். மகா வரப்ரசாதியான இந்த அன்னைக்கு செவ்வாய், வெள்ளிகிழமை தோறும் 9 வாரங்கள் ராகு கால வேளை பூஜை செய்து மங்கள சண்டிகா ஸ்தோத்ரம் படித்து வந்தால் நினைத்த காரியம் சித்தியாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    அடுத்து கோமுகம். மேலே பிரம்ம தேவன் அருள்பாலிக்கிறார். கோமுகத்திற்கருகே சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. வடக்குப் பிரகாரத்தில் ஸ்ரீ சந்திரசேகரர், சுக்கிரவார அம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், பிட்சாடனர், மோகினி, குண்டோதரன், அஸ்திர தேவர்,விநாயகர், வீரபாகு மற்றும் சுமித்திரத் தொண்டர் வீற்றிருக்கின்றனர்.

    அடுத்து 63 நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், தொகையடியார் 9 பேர்கள், சிவநேசர், அங்கம் பூம்பாவை, கிழக்கு நோக்கி துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஐந்துதலை நாகர், நாகப்படத்தின் கீழ் சிவலிங்கம், காமாட்சி, ஏகாம்பரேசுவரர், பெரிய சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் சிவலிங்கம், இரு நாகங்களின் படங்களின் கீழ் சிவலிங்கம், ஐந்து தலை பாம்பின் கீழ் 2 சிவலிங்கங்கள் மற்றும் தெற்கு நோக்கிய பைரவர் (அஷ்டமியில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடத்தப்படுகிறது) திருஉருவங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

    கிழக்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் ஒரு சிவலிங்கமும், இதனையடுத்து ஐந்து தலை நாகத்தின் படத்தின் நிழலில் மற்றொரு சிவலிங்கமும், கணேசர், வீரபத்திரர், சிவலிங்கம், சைவ நால்வர், அடுத்து ஒரு சிவலிங்கமும் நந்தி எம்பெருமானும் பொள்ளாப் பிள்ளையாரும் உள்ளனர். அதற்கெதிரே மூலஸ்தானத்தின் பின்புறம் திருமாலும் பிரம்மனும் தேடிக்காண முடியாத பிறையண்ணல், லிங்கோத் பவராகக் காட்சியளிக்கிறார். எதிரே பொள்ளாப் பிள்ளையார் அருகில் வரிசையாக 63 நாயன்மார்களின் மூலவ மூர்த்திகளும் சூரிய பகவானும் அருள்புரிகிறார்.

    தட்சிணாமூர்த்தி

    கருவறையின் தெற்கு சுவர் மாடத்தில் குரு தட்சிணாமூர்த்தியும் அவருக்கு அருகில் செல்வ கணபதியும் அருள்புரிகிறார்கள். அறுபத்துமூவர் திருஉருவங்களுக்கு அருகில் சேக்கிழார் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். அடுத்து வடக்கு நோக்கியவாறு பெரிய கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இதில் நேராக வடக்கிலுள்ள நடராஜர் திருஉருவப் பிம்பத்தை காணலாம்.

    மேற்கு வரிசையில் கற்பகாம்பிகை, ஸோமாஸ்கந்தராகிய அம்மையப்பர் உற்சவ மூர்த்திகளை காணலாம். உள்ளே எங்கேயும் சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது சரியில்லை. ஏனெனில் எங்கு நோக்கினும் சன்னிதிகள். துவஜஸ்தம்பத்தின் அருகில் தான் அதுவும் வடக்கு நோக்கியே பெண்கள் அஷ்டாங்கமாகவும் ஆண்கள் சாஷ்டாங்கமாகவும், விழுந்து கும்பிடுவது சிறந்தது என்கிறது சாஸ்திரம்.

    அங்கம் பூம்பாவை, திருஞானசம்பந்தர்

    வெளி பிராகாரத்தில் அங்கம்பூம்பாவைக்கென்று சன்னிதி தனி விமானத்துடன் உள்ளது. அங்கம் பூம்பாவை கிழக்கு நோக்கி இருக்க அதே சன்னிதியில் திருஞான சம்பந்தர் வடபுறம் பார்த்துகாட்சி தருகிறார். சிவனருள் பெற்ற அங்கம் பூம்பாவையின் கதையை பார்க்கலாம்.

    சிவபிரானின் அடியாரான சிவநேச செட்டியாரின் மகளான பூம்பாவை ஒரு நாள் நந்தவனத்தில் சிவபிரானுக்காக மலர் பறிக்கும் வேளையில் கொடிய விஷநாகம் தீண்டி மரணமடைந்தாள். செட்டியார் அவளை திருஞான சம்பந்தருக்கு மணமுடிக்க நிச்சயித்திருந்தார்.

    ஆனால் திடீரென நிகழ்ந்த அவளது மரணத்தால் அவரது எண்ணம் ஈடேற முடியாமல் போயிற்று. மனதைக் கல்லாக்கிக் கொண்டு உடலை எரித்த அவர் அவளது சாம்பலை மட்டும் கரைக்க மனமில்லாமல் ஒரு பானையில் எடுத்து. வைத்துக் கொண்டார். அச் சமயம் மயிலைக்கு விஜயம் செய்திருந்த திருஞான சம்பந்தர் நடந்த விஷயத்தை அறிந்து சிவநேசரை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அழைத்துவரச் செய்தார். அவரும் தனது மகளின் சாம்பல் அடங்கிய பானையுடன் அவ்விடம் வந்தார்.

    ஞானசம்பந்தர் மனமுருகி சிவபிரானை பிரார்த்தித்தார். உடனே அவர் நாவினின்று 'மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை' என்ற பதிகத்துடன் பாடல்கள் சரளமாக வெளிவந்தன. அவர், ஒவ்வொரு திருநாளாகக் குறிப்பிட்டு, அவ்வைபவத்தை 'அதைக் காணாமல் போகலாமா பூம்பவாய்' என பாடப்பாட சிவபெருமான் அருளுடன் எலும்புகள் இணைந்து சாம்பல் சதை பெற்றது. 12 வயது பெண்ணாக குடம் உடை வெளிப்பட்டாள். சாம்பலும், எலும்பும் கபாலீஸ்வரர் அருளால் மீண்டும் பெண்ணாக மாறிய புண்ணிய க்ஷேத்திரமிது.

    வாகனம், யாக சாலை அனுதினமும் கபாலீஸ்வரருக்கு தீபாராதனை நடக்கும்போது அடிக்கும் பெரியமணி உயரே மதில் சுவரில் கட்டப்பட்டுள்ளது. வடக்குப் பிரகாரத்தில் வரிசையாக வாகனங்கள் வைக்கும் அறைகளும், யாக சாலையும் உள்ளன. வலது புறத்தில் புன்னைவன நாதருக்கு அம்பிகை மயிலாக வந்து பூஜை செய்யும் காட்சியும் அருகில் தல விருட்சமாகிய புன்னை மரம் உள்ளது.

    சனீஸ்வர பகவான்

    சனீஸ்வர பகவானுக்கென்று சன்னிதி தனியாக உள்ளது. காக வாகனத்துடன் மேற்கு பக்கம் பார்த்து அருள்புரியும் இவரை சனிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள்.

    நவக்கிரகம்

    சனீஸ்வரருக்கு எதிர்பக்கம் கிழக்கு பிரகாரத்தில் திரும்பினால் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் நவக்கிரகங்கள் மற்றும் ஜகதீச்வரரின் சன்னிதிகள் காணப்படுகின்றன.

    கோவில் பிராகாரம்

    தரிசனம் முடித்து கிளம்புவதற்கு முன் சிறிது நேரம் பிராகாரத்தில் உட்கார்ந்து விட்டே கிளம்ப வேண்டும் என்பது மரபு. தெய்வ சிந்தனையுடன் உட்காரும் அந்த சில நிமிட துளிகளில் கிடைக்கும் மன அமைதி வேறு எதிலும் கிடைக்காது என்பது நிதர்சனம்.

    வீதி உலா

    கோவிலைவிட்டு வெளியே வந்தால் வீதியுலா வரும் தெய்வ மூர்த்திகள் சற்று நேரம் நின்று தரிசனமளிக்கும் 16 கால்மண்டபமும், சன்னிதித் தெருவின் முடிவில் திருத்தேரும் உள்ளன.

    Next Story
    ×