என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Route change"

    • கோயிலை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (6-6-2025) விடுமுறை அறிவிப்பு.
    • விடுமுறைக்கு ஈடாக வரும் 21.08.2025 (சனிக்கிழமை கீழ்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி அக்கோயிலை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (6-6-2025) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாவட்டம், புரசைவாக்கம் கட்டம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அ/மி கங்காதரேசுலார் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாயின் ஒரு பகுதியாக வருகிற 00.06.25 / வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு திருத்தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது என்பதால், இத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு 06.06.2025 (நாளை) இக்கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கீழ்க்காணும் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.

    இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.08.2025 (சனிக்கிழமை கீழ்காணும் பள்ளிகள் இயங்கும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டைத்தை ஒட்டி நாளை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • குருவாயூர் விரைவு ரெயில் வருகிற 7-ந் தேதி பாதை மாற்றி அமைக்கப்படுகிறது.
    • குருவாயூர் விரைவு ெரயில்வருகிற 7-ந் தேதி பாதை மாற்றி அமைக்கப்படுகிறது.

    கடலூர்:

    விருத்தாசலம் ெரயில் பாதை பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் குருவாயூர் விரைவு ெரயில்வருகிற 7-ந் தேதி பாதை மாற்றி அமைக்கப்படுகிறது.அதன்படி 7-ந் தேதி அன்று சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் புறப்படும் ெரயில், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக ,மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால், விருத்தாசலம், பெண்ணாடம், அரியலுார், ஸ்ரீரங்கம் ஆகிய நிலையங்களில் நிறுத்தம் இருக்காது. ஆனால் பயணிகள் வசதிக்காக திருப்பா திரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை ெரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    ×