search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Purasawalkam"

    • புரசைவாக்கம் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு நடைபாதை கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு உள்ளன.
    • ஆக்கிரமிப்பு கடைகளால் புரசைவாக்கம் பகுதி முழுவதும் காலை, மாலை நேரங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கம் தானா தெரு சாலையோர நடைபாதைகளில் திடீர் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை புரசைவாக்கம் தானா தெரு சாலையில் திடீரென ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகள் பெருகி வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் புரசைவாக்கம் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு நடைபாதை கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நடைபாதை பகுதியில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் மற்றும் பழக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சாலை ஓர பகுதிகளில் நடந்து செல்ல பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து நெரிசலால சிறுசிறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

    இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் புரசைவாக்கம் பகுதி முழுவதும் காலை, மாலை நேரங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    எனவே இந்த திடீர் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்படாத வண்ணம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    புரசைவாக்கத்தில் போலீஸ்காரரை தாக்கிய 3 கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே நேற்று இரவு போக்குவரத்து போலீஸ்காரர் ஆறுமுகராஜ் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கையில் பீர்பாட்டில்களை வைத்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதை போலீஸ்காரர் ஆறுமுகராஜ் தட்டிக்கேட்டார்.

    அப்போது அவர்கள் போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்தனர். திடீரென்று அவரை அடித்து உதைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ்காரர் ஆறுமுகராஜ் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அங்கு சென்று போலீஸ்காரரை தாக்கியவர்களை மடக்கி பிடித்தார்.

    விசாரணையில் அவர்கள் அயனாவரம் குட்டியப்பன் தெருவை சேர்ந்த ஜேக்கப் (21), அயனாவரம் செம்மன்பேட்டையை சேர்ந்த சாமுவேல் (21), ஜோசப் (20) என்பதும் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.



    புரசைவாக்கம்-சூளை சந்திப்பிலும் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணி தொடங்கியுள்ளது. ஆய்வு பணி முடிந்த பிறகு சுரங்கம் தோண்டும் சேவை தொடங்கும். #MetroTrain
    பெரம்பூர்:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    மாதவரம்-சிறுசேரி இடையே மெட்ரோ ரெயிலில் செல்வதற்கான புதிய வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மாதவரத்தில் இருந்து மூலக்கடை, பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், புரசைவாக்கம், கெல்லீஸ் வழியாக சிறுசேரி வரை மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டப்படுகிறது.

    ரூ.88 ஆயிரம் கோடி செலவில் இந்த மெட்ரோ ரெயில் பாதையில், முக்கிய ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதில் புரசைவாக்கம், பெரம்பூர், அயனாவரம் முக்கியமானவை.

    இந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் மாதவரத்தில் இருந்து சிறுசேரி வரை அமைய இருக்கும் பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் மண்ணின் தன்மை, சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தின் தன்மை ஆகியவை குறித்து கண்டறியப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக புரசைவாக்கம்-சூளை சந்திப்பிலும் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணி தொடங்கியுள்ளது. இதையொட்டி, அங்கு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆய்வு பணி முடிந்த பிறகு சுரங்கம் தோண்டும் சேவை தொடங்கும். #MetroTrain
    மெட்ரோ ரெயில் வழித்தடத்தை கண்டித்து புரசைவாக்கம், பட்டாளத்தில் இன்று கடைகள் அடைப்பு போராட்டம் நடந்தது. வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தால் அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள் பொதுமக்களிடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.85 ஆயிரம் கோடி செலவில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மாதவரம்- சிறுசேரி வரையிலான மெட்ரோ வழித்தடம் மாதவரம் மில்க் காலனி, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, டவ்டன் சந்திப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ஜெமினி, ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை, ஆழ்வார்பேட்டை கச்சேரி ரோடு, மந்தைவெளி சாலை, அடையார் வழியாக சிறுசேரியை சென்றடைகிறது.

    இந்த திட்டத்துக்கு புரசைவாக்கம், பட்டாளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மெட்ரோ வழித்தட பாதை பட்டாளம், டவ்டன் சந்திப்பு, புரசைவாக்கம் வழியாக அமைக்கப்படுவதால் 5 ஆயிரம் வியாபாரிகளின் குடும்பத்தினர், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். புரசைவாக்கத்தில் வியாபாரம் முழுமையாக பாதிக்கப்படும்.

    ஓட்டேரியில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக நேரடியாக கெல்லிஸ் செல்லும் வகையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புரசைவாக்கம், பட்டாளத்தில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். இப்பகுதியில் உள்ள சுமார் 1000 கடைகள் மூடப்பட்டு இருந்தது.

    புரசைவாக்கம் தானா தெருவில் வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் 500 வியாபாரிகள் கருப்பு சட்டை அணிந்து மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    புரசை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.நாகபூ‌ஷணம், செயலாளர் வி.ராமலிங்கம், பொருளாளர் பி.கே.ஹரி கிருஷ்ணன், மாவட்ட தலைவர் ப.தேவராஜ், நிர்வாகிகள் இப்ராகிம், ராயல்அலி, கமல், ரவி, அப்துல்லா, சுதா, அருண் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தால் இன்று புரசைவாக்கம், பட்டாளம், டவ்டன் பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. #MetroTrain
    ×