search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரசைவாக்கத்தில் போலீஸ்காரர் மீது தாக்குதல் - 3 மாணவர்கள் கைது
    X

    புரசைவாக்கத்தில் போலீஸ்காரர் மீது தாக்குதல் - 3 மாணவர்கள் கைது

    புரசைவாக்கத்தில் போலீஸ்காரரை தாக்கிய 3 கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே நேற்று இரவு போக்குவரத்து போலீஸ்காரர் ஆறுமுகராஜ் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கையில் பீர்பாட்டில்களை வைத்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதை போலீஸ்காரர் ஆறுமுகராஜ் தட்டிக்கேட்டார்.

    அப்போது அவர்கள் போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்தனர். திடீரென்று அவரை அடித்து உதைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ்காரர் ஆறுமுகராஜ் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அங்கு சென்று போலீஸ்காரரை தாக்கியவர்களை மடக்கி பிடித்தார்.

    விசாரணையில் அவர்கள் அயனாவரம் குட்டியப்பன் தெருவை சேர்ந்த ஜேக்கப் (21), அயனாவரம் செம்மன்பேட்டையை சேர்ந்த சாமுவேல் (21), ஜோசப் (20) என்பதும் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.



    Next Story
    ×