என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி
- ராமநாதபுரத்தில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
- முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் கடந்த 14-ந் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
பின்னர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.உடன் ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் உள்ளனர்.
Next Story






