என் மலர்
சினிமா செய்திகள்

பாலிவுட் நடிகை ஆலியா பட் கோல்டன் குளோப் விருது வென்றார்
- சவுதி அரேபியாவில் செங்கடல் திரைப்பட விழா நடைபெற்றது.
- இதில் நடிகை ஆலியா பட்டிற்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.
சவுதி அரேபியா:
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் வரும் 13-ம் தேதி வரை செங்கடல் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இந்த செங்கடல் திரைப்பட விழாவில் சிறப்பான நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், பாலிவுட் நடிகையான ஆலியா பட்டின் சிறந்த பங்களிப்பிற்காக 'கோல்டன் குளோப்' விருது வழங்கப்பட்டுள்ளது
அப்போது, தனது தொடக்க காலத்தில் மிகுந்த ஆர்வமாக நடித்ததாக ஆலியா பட் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஓமர் ஷெரிப் விருதை துனிசிய நடிகை ஹெண்ட் சப்ரி வென்றார்.
இதுதொடர்பாக கோல்டன் குளோப் தனது எக்ஸ் வலைதளத்தில், கோல்டன் குளோப் ஓரிஸான் விருதினை ஆலியா பட்டிற்கு கிடைத்ததில் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த செங்கடல் திரைப்பட விழாவில் நடிகர் அமிர் கானுக்கு விருது வழங்கப்பட்டது.
Next Story






