என் மலர்
நீங்கள் தேடியது "ஆந்திரா விபத்து"
- குர்னூரில் நடந்த ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் கருகி உயிரிழந்தனர்.
- குடிபோதையில் இருந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை ஓட்டியதுதான் விபத்து முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேகூர் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி பலியாகினர். இவர்களில் 19 பேர் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள். ஒருவர் குடிபோதையில் இருசக்ர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் சிவசங்கர்.
இவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தபோது, திடீரேன பைக் உடன் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த பைக், டிவைடரில் (சாலை நடுவே உள்ள தடுப்பச்சுவர்) மோதியுள்ளது. அப்போது அந்த பகுதியாக வந்த ஆம்னி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி, அதை இழுத்துச் சென்றுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து, அது பேருந்தில் பரவி 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது அனைத்துக்கும் காரணம் சிவசங்கர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததுதான். இந்த நிலையில் நகர போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள் என கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கருணை காட்டக்கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சஜ்ஜனார் கூறியதாவது:-
குடிபோதையில் வாகனம் ஒட்டுபவர்கள் பயங்கரவாதிகள். அந்த காலக்கட்டத்தில், அவர்களின் செயல்கள் நமது சாலைகளில் பயங்கரவாதச் செயல்களைத் தவிர வேறில்லை. பயங்கரமான குர்னூல் பேருந்து விபத்து, 20 அப்பாவி மக்களில் உயிர்களை பிறந்துள்ளது. உண்மையான அர்த்தத்தில் அது விபத்து அல்ல. இது ஒரு தடுக்கக்கூடிய படுகொலை. குடிபோதையில் பைக் ஓட்டியவரின் கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற நடத்தையால் ஏற்பட்டது.
இது ஒரு சாலை விபத்து அல்ல, மாறாக ஒரு குற்றச்செயலாகும், இது அலட்சியத்தால் ஏற்பட்ட குற்றமாகும், இது சில நொடிகளில் முழு குடும்பங்களையும் அழித்தது.
பி. சிவசங்கர் என அடையாளம் காணப்பட்ட பைக் ஓட்டுநர், குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளில் அவர் அதிகாலை 2:24 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதைக் காட்டுகிறது. அதற்கு சில நிமிடங்களுக்கு பின் அவர் கட்டுப்பாட்டை இழந்து அதிகாலை 2:39 மணிக்கு பேரழிவு தரும் மோதலை ஏற்படுத்தியுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டும் அவரது முடிவு, ஆணவத்தின் ஒரு தருணத்தை கற்பனை செய்ய முடியாத அளவிலான சோகமாக மாற்றியது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் எல்லா வகையிலும் பயங்கரவாதிகள் என்ற எனது கூற்றில் நான் உறுதியாக நிற்கிறேன். அவர்கள் வாழ்க்கையையும், குடும்பங்களையும், எதிர்காலத்தையும் அழிக்கிறார்கள். இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது பிடிபடும் ஒவ்வொரு நபரும் சட்டத்தின் முழு சக்தியையும் எதிர்கொள்வார்கள். அப்பாவி உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கு எந்த கருணையும், விதிவிலக்கும், கருணையும் இருக்காது. ஒரு சமூகமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவறு என்று அழைப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது. இது வாழ்க்கையை சிதைக்கும் ஒரு குற்றம், அதற்கேற்ப தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.
- அந்த பேருந்து விதிமுறைகளை மீறி ஸ்லீப்பர் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ் நேற்று காலை ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது.
பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.
இந்நிலையில் ஆம்னி பஸ்ஸில் பார்சலில் வைக்கப்பட்டிருந்த ரூ.46 லட்சம் மதிப்புடைய 234 ஸ்மார்ட்போன்கள் வெடித்ததே தீவிபத்து தீவிரமடைய காரணம் என்று தெரியவந்துள்ளது.
பேருந்தின் சரக்கு வைக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் வெப்பம் காரணமாக வெடித்ததால் தீ மளமளவென பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயணிகள் பேருந்தில் செல்போன்கள் பார்சலை எடுத்துச் சென்றது கடுமையான பாதுகாப்பு விதிமீறலாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்த பேருந்து விதிமுறைகளை மீறி ஸ்லீப்பர் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
பைக்கில் வந்து பேருந்துடன் மோதியவர்கள் விபத்துக்கு சிறிது நேரம் முன் பெட்ரோல் பங்கில் மதுபோதையில் காணப்பட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது. எனவே விசாரணை முழுமையாக நிறைவடைந்த பின்னரே பஸ் விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.
- சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
- ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து சேலம் வர திட்டமிட்டு பயணித்துள்ளார்.
திருப்பூர்:
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னத்தேகூர் அருகே சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி பலியாகினர். இதில் திருப்பூரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர், உடல் கருகி பலியான தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் பூலுவப்பட்டி தோட்டத்துபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன்கள் ஜெயபிரகாஷ், யுவன் சங்கர் ராஜா (வயது 23). மொபட்டில் சென்று காய்கறி வியாபாரம் செய்யும் ராஜா, மிகவும் கஷ்டப்பட்டு தனது இரு மகன்களையும் படிக்க வைத்தார்.
ஜெயபிரகாஷ் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பி.எஸ்சி. படிப்பு முடித்த யுவன் சங்கர்ராஜா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனியார் மருந்து கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே திருப்பூருக்கு பெற்றோரை காண வந்தார்.
அதன்பின் மீண்டும் ஐதராபாத் சென்று பணிபுரிந்து வந்தார். நீண்ட தூரத்தில் பணியாற்றிய அவர் தமிழக பகுதியிலும் வேலை தேடினார். இதைத்தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான நேர்காணலுக்கு யுவன் சங்கர் ராஜா அழைக்கப்பட்டார்.
இதற்காக அவர் ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து சேலம் வர திட்டமிட்டு பயணித்துள்ளார். ஆம்னி பஸ்சின் 3-ம் நம்பர் இருக்கையில் இருந்த அவர் தீ விபத்தில் உடல் கருகி பலியானார். யுவன்சங்கர் ராஜா இறப்பு செய்தி கேள்விப்பட்டதும், அவரது பெற்றோர் கதறி துடித்தனர். உடனடியாக உறவினர்களுடன் கர்னூல் மாவட்டத்துக்கு சென்றனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இறப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரது பெற்றோரிடம் ரத்தம் பெறப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகே அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விபத்து ஏற்பட்டதும் பஸ் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது.
- பின் பகுதியில் பயணித்த பயணிகள் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்து குதித்து உயிர் தப்பினர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதி ஆம்னி பஸ் தீப்பிடித்தது. பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.
பயணிகள் ஏசி படுக்கை வசதி கொண்ட பஸ்சில் இதமான போர்வைகளால் போர்த்தப்பட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களில் யாருக்கும் அந்த நேரத்தில் அது அவர்களின் கடைசி தூக்கம் என்று தெரியாது.
பஸ்சில் பலியான 19 பேரின் முழு வாழ்க்கையும், கொளுந்துவிட்டு எரிந்த தீயில் எரிந்து சாம்பலாகி விட்டது.
இந்த விபத்தில் 19 பயணிகள் உடல் கருகி இறந்தனர். அவர்களிடமிருந்த செல்போன்கள், லேப்டாப்கள் வெடித்து சிதறியது.
விபத்து குறித்து உயிர் தப்பிய பயணிகள் கூறியதாவது:-
விபத்து ஏற்பட்டதும் பஸ் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
எங்களிடம் இருந்த செல்போன், லேப்டாப் மற்றும் கை, கால்களை பயன்படுத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பித்தோம்.
பின் பகுதியில் பயணித்த பயணிகள் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்து குதித்து உயிர் தப்பினர்.
தீ விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர்கள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து முன்பக்க கதவை திறந்து விட்டிருந்தால் இவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது. இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு டிரைவர்களின் அலட்சியமே காரணம். அவர்கள் முன் பக்க கதவை திறந்து விடவில்லை. பயணிகளை எச்சரிக்காமல் குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உயிர் தப்பிய அஷ்வின் என்பவர் கூறுகையில்:-
நான் டிரைவர் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தேன். தீ விபத்து ஏற்பட்டதும் கண் விழித்தேன். டிரைவர் ஒருவர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். மேலும் கீழே குதித்து மணலை அள்ளி வீசி தீயை அணைக்க முயன்றதை கண்டேன்.
ஆனால் அவர்கள் முழுமையாக முயற்சி செய்யாமல் ஓடிவிட்டனர். நான் பஸ் ஜன்னல் வழியாக குதித்து தப்பினேன் என்றார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ்ஸை ஓட்டி வந்தவர் பல்நாடு மாவட்டம் ஒப்பி செர்லாவை சேர்ந்த டிரைவர் லட்சுமய்யா என தெரியவந்தது.
கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆனால் லட்சுமய்யா 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு 10-ம் வகுப்பு தோல்வி அடைந்ததாக போலி சான்றிதழ் கொடுத்து கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றது தெரியவந்துள்ளது.
பஸ்சில் தீ அணைக்கும் கருவி, ஜன்னல்களை உடைக்கும் சிறிய சுத்தியல் போன்றவை இல்லை. இதனால் உயிர் பலியை தடுக்க முடியவில்லை. விதிமீறியதாக ஆம்னி பஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பஸ்சில் இருந்த பயணிகளில் 18 பேர் உயிரிழந்து இருந்த நிலையில் லக்கேஜ் கேரியரில் ஒரு பயணி இறந்து கிடந்தார். அவர் எப்படி லக்கேஜ் கேரியருக்கு சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்ற பயணி ஒருவரின் உடல் ஜன்னலுக்கு வெளியே பாதியும் உள்ளே பாதியும் கருகிய படி கிடந்தார். இது விபத்தின் தீவிரத்தை காட்டியது.
இறந்தவர்களில் 18 பேரின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முன்பதிவு செய்யாமல் பயணித்த ஒரு பயணியின் அடையாளம் தெரியாமல் உள்ளது.
மேலும் பஸ் விபத்தில் பலியானவர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதில் ஒருவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மதகிரி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 32) இவர் சங்கா ரெட்டி பகுதியில் சிப்ஸ் தின்பண்டங்கள் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ்சில் அவர் ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு வந்துள்ளார்.
மேலும் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜா (22 )என்பது தெரிய வந்துள்ளது. அவர் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
- கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன.
- காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.
ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பேருந்து தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.
- உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு தெலுங்கானா முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்தின்போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது கண்ணாடி ஜன்னலை உடைத்து பலர் குதித்து உயிர் தப்பினர். இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளதாகவும்,18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பேருந்து தீ விபத்து சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள இரங்கலில், இந்த விபத்தை பேரழிவு என்று குறிப்பிட்டு, காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்து உள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு மூத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்து, உடனடி உதவிக்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், ஹெல்ப்லைனை நிறுவவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
பேருந்து தீ விபத்து சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் நடந்த ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் உயிர் இழப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
- தீவிபத்தின் போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர்.
- பேரழிவு தரும் பேருந்து தீவிபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்தின் போது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட போது பலரும் அவசர கால கதவு வழியே குதித்து தப்பியுள்ளனர். இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து தீயை உடனடியாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே, பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பேரழிவு தரும் பேருந்து தீவிபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்மகூர் அடுத்த வெங்கட்ராவ் பள்ளியை சேர்ந்த 8 பெண் தொழிலாளர்கள் தெல்ல பாடுவில் உள்ள புகையிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். இன்று அதிகாலை ஆட்டோவில் வேலைக்கு சென்றனர். ஆத்மகூர் அடுத்த ஏ.எஸ்.பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதி விட்டு சென்றது.
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.
- வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் நாராயணா மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவியின் சகோதரி நிச்சயதார்த்தம் நேற்று புச்சி ரெட்டிப்பாலத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து 6 மாணவர்கள் காரில் மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தனர்.
நெல்லூர் அடுத்த போத்திரி ரொட்டி பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே கார் வேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த வீட்டின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
வீட்டில் இருந்த வெங்கட ரமணய்யா (வயது 68)என்பவர் இடிபாடுகளில் சிக்கி இறந்தார். மேலும் காரில் இருந்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி 3 மாணவர்கள் இறந்தனர்.
மாணவர்கள் இறந்தது குறித்து தகவல் அறிந்த சக மாணவர்கள் ஆஸ்பத்திரி முன்பாக குவிந்தனர். சற்று முன்பு தங்களுடன் சந்தோஷமாக இருந்தவர்கள் இறந்ததால் மாணவர்களின் நண்பர்கள் கதறி துடித்தனர்.
இந்த விபத்துக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையின் தடுப்பில் மோதி எதிர் திசையில் கார் சென்றது. அப்போது எதிரே வந்த லாரியில் கார் நேருக்கு நேர் மோதியது.
- அதிகாலையில் 2 விபத்துகளில் 8 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்து இன்று அதிகாலை காரில் புறப்பட்டு வந்தனர். கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு என்ற இடத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது.
சாலையின் தடுப்பில் மோதி எதிர் திசையில் கார் சென்றது. அப்போது எதிரே வந்த லாரியில் கார் நேருக்கு நேர் மோதியது.
இதில் கார் முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கோபி (வயது 23), ராதா பிரியா (16), ராகேஷ் (12) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். சாமிநாதனின் மனைவி படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு விஜயவாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் பலியான 4 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல திருப்பதி மாவட்டத்தில் நெல்லூர் - வேலூர் சாலையில் இன்று காலை சாலை தடுப்பில் கார் மோதியதில் 4 பேர் இறந்தனர்.
அதிகாலையில் 2 விபத்துகளில் 8 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர்களில் 5 பேர் மேற்கு கோதாவரி மாவட்டம் தல்லாரேவுவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து பந்துமில்லி நோக்கி ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இதில் 10 பேர் இருந்தனர்.
புதுச்சேரியில் இருந்து மற்றொரு லாரி பீமாவரம் நோக்கி வந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு கிருஷ்ணா மாவட்டம், சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது 2 லாரிகளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் உட்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மற்றொருவர் உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர்களில் 5 பேர் மேற்கு கோதாவரி மாவட்டம் தல்லாரேவுவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.
- போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாராயணன் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்லூர் அடுத்த எலுட்லாவை சேர்ந்த 13 தொழிலாளர்கள் திம்மம்பேட்டையில் உள்ள வாழைத்தோட்டத்தில் வேலைக்கு சென்றனர்.
நேற்று மாலை வேலை முடிந்து அனைவரும் ஒரே ஆட்டோவில் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.
தலைகாரி பள்ளி என்ற இடத்தில் ஆட்டோ வந்தபோது எதிரே வந்த ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது.
ஆட்டோவில் இருந்த நாகம்மா, ராமாஞ்சினம்மா, பாலபெத்தைய்யா மற்றொரு நாகம்மா உட்பட 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாராயணன் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரை சேர்ந்த 7 கூலி தொழிலாளர்கள் விபத்தில் பலியான சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.






