என் மலர்
இந்தியா

எந்த மொழியும் உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ இல்லை: சந்திரபாபு நாயுடு
- தனது தாய்மொழியில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
- தொழில்நுட்பம் மொழிகளைச் சிதைப்பதில்லை, மாறாக அவற்றைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது.
ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் 4-வது உலக தெலுங்கு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
மக்கள் ஒருவருக்கொருவர் அவரவர்களுடைய மொழிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஒரு மொழியை விட மற்றொரு மொழி உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ அல்ல. தனது தாய்மொழியில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். தொழில்நுட்பம் மொழிகளைச் சிதைப்பதில்லை, மாறாக அவற்றைப் பாதுகாப்பதற்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு மொழியின் மீது அன்பு கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Next Story






