என் மலர்
நீங்கள் தேடியது "electrical attack death"
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமார் (34). இவர் இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டில் சுவிட்ச் போட்ட போது உடலில் மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் உள்ளவர்கள் மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் நாரணமங்கலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
இங்கு சாத்திக்கோட்டையை சேர்ந்த வேம்பன் மகன் சேகர் (வயது 40) என்பவர் கட்டிட வேலை பார்த்து வந்தார்.
இவர் சம்பவத்தன்று பணிகளை முடித்து விட்டு மோட்டார் சுவிட்ச்சை போட்டுள்ளார். இதில் எதிர்பாரத விதமாக மின்சாரம் சேகர் மீது பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சேகர் இறந்தார்.
சேகரை காப்பாற்றுவதற்காக அவருடன் பணியாற்றும் சாமிகண்ணு முயற்சி செய்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விசாரணை நடத்தி வருகிறார்கள்.