மின்சாரம் தாக்கி தாய், மகன் பலி

மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி தாய், மகன் பலி
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகம் அபிவிருத்தீஸ்வரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 55). கந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார்.

இந்த தம்பதிக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் ஏற்கனவே இறந்து விட்டார்.

இவரது மகள் மஞ்சு பிரியா குடவாசலில் ஒரு டெய்லர் கடையில் பணிபுரிந்து வருகிறார். மகன் பிரசன்னா எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

இவர்கள் 3 பேரும் திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் காளியம்மன் கோவில் தெருவில் ஒரு ஓட்டு வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில் மஞ்சுபிரியா வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டில் தாய் ராஜலட்சுமி, தம்பி பிரசன்னா ஆகிய இருவரும் சுவற்றில் சாய்ந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதைப் பார்த்த மஞ்சு பிரியா ஓடிச்சென்று தனது தாயை தொட்டுள்ளார். அப்போது மஞ்சு பிரியாவை மின்சாரம் தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.

பின்னர் மின்சாரம் தாக்கி ராஜலட்சுமி, பிரசன்னா ஆகியோர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து கொரடாச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தாய், மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மஞ்சு பிரியா கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com