search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்சாரம் தாக்கி  2 சகோதர்கள் பலி
    X

    மின்சாரம் தாக்கி 2 சகோதர்கள் பலி

    • மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஞாயிறு ஊராட்சி கன்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன்கள் விஷ்வா (12) சூர்யா (9).

    இருவரும் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்றனர். அப்போது பம்பு செட்டின் அறையில் அருகில் கீழே கிடந்த இரும்பு பைப்பை இருவரும் மிதித்தனர். அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வராததால் தேடிய பெற்றோர்கள் குழந்தை வயல்வெளியில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மின்சாரத்தை துண்டித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்து போலீசார் உடலை கைப்பற்றினார்.

    இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பள்ளி செல்லும் சகோதர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×