search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer Land"

    மயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் வெளியேறிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. #ONGC
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்திலும், அருகில் உள்ள பொன்னூர் கிராமத்திலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் 4 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த 4 எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், குழாய்கள் மூலம் பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள மற்றொரு பிளாண்ட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஒரே குழாய் மூலம் குத்தாலம் ஓ.என்.ஜி.சி. பிளாண்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.

    இந்த எண்ணெய் குழாய்கள் விளைநிலங்களில் புதைக்கப்பட்டு, அதன் மூலம் கச்சா எண்ணெய் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு விளைநிலத்தில் புதைக்கப்பட்ட எண்ணெய் குழாய் திடீரென வெடித்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனை கண்ட அந்த நிலத்தின் உரிமையாளர், பாண்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை(வயது 50), உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட குழாயின் வால்வை அடைத்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறாத வகையில் தடுத்து நிறுத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  #ONGC


    சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார். #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
    ஓமலூர்:

    சேலம் விமான நிலையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் விமான நிலையத்திற்கு ஏற்கனவே நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாயிகள் நிலத்தை எடுத்தால் அவர்கள் எங்கே செல்வார்கள்.

    சேலம் உருக்காலை மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் ஆலை அருகில் பல ஆயிரம் ஏக்கர் காலி நிலங்கள் உள்ளன. அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.

    அதையும் மீறி விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    காவிரி மேலாண்மை வாரியத்தை வி.பி.சிங் உருவாக்கியது போல முழு அதிகாரத்துடன் அமைத்தால் தான் ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
    ×