என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சா எண்ணெய் படலம்"

    • இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.
    • இந்தியா ரஷியாவினுடைய சலவை நிலையமாக உள்ளது

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.

    டிரம்பின் எதிர்ப்பை தொடர்ந்தும் இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.

    இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை அதை சுத்திகரித்து ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு விற்பதாக வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவாரோ குற்றம் சாட்டினார்.

    ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய பீட்டர் நவாரோ, இந்தியா ரஷியாவினுடைய சலவை நிலையமாக உள்ளது. இந்திய மக்களின் செலவில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் . அதை நாம் நிறுத்த வேண்டும். இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி, பதப்படுத்தி, அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கின்றன. இது உக்ரேனியர்களைக் கொல்கிறது. வரி செலுத்துவோராக நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் அவர்களுக்கு அதிக பணம் அனுப்ப வேண்டும்.

    பிரதமர்மோடி ஒரு சிறந்த தலைவர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அவர் விளாடிமிர் புடின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் ஏன் கூட்டு சேருகிறார் என்பது எனக்குப் புரியவில்லை" என்று தெரிவித்தார். 

    மயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் வெளியேறிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. #ONGC
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்திலும், அருகில் உள்ள பொன்னூர் கிராமத்திலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் 4 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த 4 எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், குழாய்கள் மூலம் பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள மற்றொரு பிளாண்ட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஒரே குழாய் மூலம் குத்தாலம் ஓ.என்.ஜி.சி. பிளாண்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.

    இந்த எண்ணெய் குழாய்கள் விளைநிலங்களில் புதைக்கப்பட்டு, அதன் மூலம் கச்சா எண்ணெய் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு விளைநிலத்தில் புதைக்கப்பட்ட எண்ணெய் குழாய் திடீரென வெடித்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனை கண்ட அந்த நிலத்தின் உரிமையாளர், பாண்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை(வயது 50), உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட குழாயின் வால்வை அடைத்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறாத வகையில் தடுத்து நிறுத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  #ONGC


    ×