search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahmins"

    • சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான் என பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா கூறியிருந்தார்
    • அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது

    அரியானா மாநிலம் ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா பிராமணர்கள் பற்றிய பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    "சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான், நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை, சாதியக்கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு" என்று அவர் பேசியிருந்தார்.சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான்,

    ரஞ்சித் சவுதாலாவின் இக்கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அரியானா பிராமண சபா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், ரஞ்சித் சிங் சவுதாலா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "சமூகத்தில் முன்னணி சமூகமாக இருக்கும் பிராமண சமூகத்தின் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. என் வார்த்தைகளால் அவர்களது மனது புண்பட்டிருந்தால், நான் அந்த வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன். நான் யாரையும் அவமதிக்க நினைக்கவில்லை" என்று பேசியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி தொடங்கப்படும்.
    • பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளோம்.

    சென்னை:

    தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது. அரசியல் அங்கீகாரத்தை பெறும் போது தான் சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்த கட்சிகள் எல்லாம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி தொடங்கப்படும்.

    பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்படுகிறது. சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்.எல்.ஏ. வாக இல்லை. பிராமணர்களின் புதிய கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அதில் பல்வேறு பிராமண சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளனர்.

    அப்போது தான் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தெரியவரும். அதே நேரத்தில் என்னை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

    பாராளுமன்ற தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் அனைவருமே வசதியாண வாழ்க்கையை வாழவில்லை. பிராமணர்களிலும் தினக்கூலிகள் இருக்கிறார்கள். இது போன்ற பிராமணர்களின் நலனுக்காகவே புதிய கட்சி தொடங்கப்படுகிறது. மேடான பகுதிகளையும், பள்ளத்தையும் சரி செய்து சமமாக்குவதே சமூக நீதியாகும். ஆனால் அது போன்ற சமூகநீதி இங்கு இல்லை.

    ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகாவில் பிராமணர்கள் நலனுக்காக நலவாரியம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அது போன்று எந்த அமைப்பும் தமிழகத்தில் இல்லை.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளோம்.

    அதை வைத்து அடுத்த சட்ட மன்றதேர்தலில் பிராமணர்கள் கட்சி கூட்டணி அமைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது.

    பிராமணர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றும் நேரத்தில் பிரதமர் மோடியிடம் அது பற்றி எடுத்துச் சொல்லி விட்டு அதன் பிறகே பா.ஜனதாவில் இருந்து வெளியேறுவேன்.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மோடியின் புகழை உயர்த்தி பிடித்து, கட்சியை வளர்க்க முற்படாமல் வீண் விளம்பரங்களை தான் செய்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

    • ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்களின் இதுபோன்ற மோசமான கருத்துக்கள் வீண் விளம்பரத்திற்காக தெரிவிக்கப்படுகின்றன.
    • மனோஜ் குமார் ஜா மற்றும் ஜனதா தளம் கட்சி தலைவர் சஞ்சய் ஜா பிராமின்களின் பூர்விகம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.

    பீகார் மாநிலத்தின் சுபவுல் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

    சொந்த கட்சியினரிடையே பேசும் போது, டிஎன்ஏ டெஸ்ட்-இல் பிராமின்களின் பூர்விகம் ரஷ்யா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் என்றும் இந்தியா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இத்துடன் பிராமின்கள் நம்மிடையே பிரிவினை ஏற்படுத்தி நம்மை ஆள முயற்சி செய்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். மக்கள் பிராமின்களை அவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கே அனுப்ப வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

     

    "டிஎன்ஏ பரிசோதனையில் பிராமின்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் ரஷ்ய பூர்விகம் கொண்டவர்கள் ஆவர். தற்போது அவர்கள் இங்கு செட்டில் ஆகிவிட்டனர். பிராமின்கள் நம்மை பிரித்து ஆட்சி செய்ய முயற்சித்து வருகின்றனர். நாம் அவர்களை இங்கிருந்து துரத்த வேண்டும்," என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் தெரிவித்தார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    "ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரின் கருத்துக்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது. பரசுராம் ரஷ்யா அல்லது வேறு ஏதேனும் நாட்டில் இருந்து வந்துள்ளாரா? ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்களின் இதுபோன்ற மோசமான கருத்துக்கள் வீண் விளம்பரத்திற்காக தெரிவிக்கப்படுகின்றன. இதுபோன்ற கருத்துக்களுக்கு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற கருத்துக்கள் மஹாகத்பந்தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகிறது," என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணியில் இருக்கும் ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் குமார் ஜா தெரிவித்துள்ளார்.

    "ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவரின் மனநிலை சீராக இல்லை என்றே நான் நினைக்கிறேன். இதே கட்சியை சேர்ந்த மனோஜ் குமார் ஜா மற்றும் ஜனதா தளம் கட்சி தலைவர் சஞ்சய் ஜா பிராமின்களின் பூர்விகம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்," என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்து இருக்கிறார்.

    ×