என் மலர்tooltip icon

    இந்தியா

    பிராமணர்கள் அறிவு விளக்கை ஏற்றுபவர்கள்.. அவர்கள் நலனுக்காக அரசாங்கங்கள் பாடுபட வேண்டும் - டெல்லி முதல்வர்
    X

    பிராமணர்கள் அறிவு விளக்கை ஏற்றுபவர்கள்.. அவர்கள் நலனுக்காக அரசாங்கங்கள் பாடுபட வேண்டும் - டெல்லி முதல்வர்

    • ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும்.
    • இப்போது கியர்களை மாற்ற வேண்டிய நேரம் இது.

    டெல்லியின் பிதாம்பூரில் ஸ்ரீ பிராமண சபா ஏற்பாடு செய்த அகில இந்திய பிராமண மகாசபா நிகழ்வில் நேற்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் பேசிய ரேகா குப்தா, "பிராமணர்கள்தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள். பிராமணர்கள் சாஸ்திரங்களை மட்டுமல்ல, அஸ்திரங்களையும் வணங்கினர்.

    ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும். மதத்தைப் பரப்பி, நல்ல பண்புகளை வளர்ப்பதன் மூலம், பிராமண சமூகம் எப்போதும் சமூகத்தின் நன்மைக்காகவே பாடுபட்டுள்ளது. எனவே எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமூகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும்,"கடந்த 27 ஆண்டுகளாக டெல்லியின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. இப்போது கியர்களை மாற்ற வேண்டிய நேரம் இது. டெல்லிக்கு இன்னும் தீவிரமான வளர்ச்சி தேவை.

    டெல்லியின் வளர்ச்சிக்கு நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். ஒன்றுபட்ட சமூகத்தால் மட்டுமே உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும்" என்று ரேகா குப்தா கூறினார்.

    Next Story
    ×