என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராமணர்கள்"

    • போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
    • பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது,"ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்குக் கொடுக்கும் வரை அல்லது அவருடன் உறவை வளர்த்துக் கொள்ளும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதால், வர்மாவின் பேச்சை பிராமண அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. சந்தோஷ் வர்மாவின் கூற்று ஆபாசமானது, சாதிய ரீதியானது மற்றும் பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    விரைவில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பிராமண சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என அகில இந்திய பிராமண சங்கத்தின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

    • பிராமணரான அன்னு பாண்டே தொடர்ந்து மது விற்று வந்ததார்.
    • புர்ஷோத்தம் அன்னு பாண்டே தனது குரு போன்றவர் என்றும் இந்த காணொளியை நீக்கும்படியும் கேட்டுக்கொண்டார்

    மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டம் சதரியா என்ற கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் வசித்து வந்த புர்ஷோத்தம் குஷ்வாஹா என்ற ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், கிராம மக்கள் முன்னிலையில் அன்னு பாண்டே என்ற பிராமண இளைஞரின் கால்களைக் கழுவி அந்த தண்ணீரை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

    சத்தாரியா கிராமத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பிராமணரான அன்னு பாண்டே தொடர்ந்து மது விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. பிடிபட்டபோது, கிராம கூட்டத்தில் அவருக்குப் ரூ.2,100 அபராதம் விதித்தனர். அன்னு பாண்டே இதை ஏற்றுக்கொண்டார்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புர்ஷோத்தம் குஷ்வாஹா, அன்னு பாண்டே செருப்பு மாலை அணிந்திருப்பது போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு படத்தை உருவாக்கி, சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

    உடனடியாக அவர் அந்தப் பதிவை நீக்கி மன்னிப்புக் கோரிய போதும், இது பிராமண சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று சிலர் கருதினர்.

    பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு ஒன்று கூடி, புர்ஷோத்தம் தனது செயலுக்கு தண்டனை பெற வேண்டும் செய்ய வேண்டும் என்று கோரியது.

    இதன் விளைவாக, புர்ஷோத்தம் அன்னு பாண்டேயின் கால்களைக் கழுவி, அந்த நீரை அருந்த வேண்டும் கட்டாயப்படுத்தப்பட்டார். மேலும், அவர் ரூ.5,100 அபராதம் செலுத்தி பிராமண சமூகத்திடம் மன்னிப்பு கேட்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

    வைரலாகி வரும் காணொளியில், புர்ஷோத்தம் தரையில் முழங்காலிட்டு அன்னுவின் கால்களைக் கழுவுவது பதிவாகியுள்ளது.

    இருப்பினும் இதை எளிதாக கேட்டுக்கொண்ட புர்ஷோத்தம் அன்னு பாண்டே தனது குரு போன்றவர் என்றும் இந்த காணொளியை நீக்கும்படியும் கேட்டுக்கொண்டார்

    ஆனால் இந்தச் சம்பவம் குறித்து புர்ஷோத்தம் உடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

    • ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும்.
    • இப்போது கியர்களை மாற்ற வேண்டிய நேரம் இது.

    டெல்லியின் பிதாம்பூரில் ஸ்ரீ பிராமண சபா ஏற்பாடு செய்த அகில இந்திய பிராமண மகாசபா நிகழ்வில் நேற்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் பேசிய ரேகா குப்தா, "பிராமணர்கள்தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள். பிராமணர்கள் சாஸ்திரங்களை மட்டுமல்ல, அஸ்திரங்களையும் வணங்கினர்.

    ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும். மதத்தைப் பரப்பி, நல்ல பண்புகளை வளர்ப்பதன் மூலம், பிராமண சமூகம் எப்போதும் சமூகத்தின் நன்மைக்காகவே பாடுபட்டுள்ளது. எனவே எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமூகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும்,"கடந்த 27 ஆண்டுகளாக டெல்லியின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. இப்போது கியர்களை மாற்ற வேண்டிய நேரம் இது. டெல்லிக்கு இன்னும் தீவிரமான வளர்ச்சி தேவை.

    டெல்லியின் வளர்ச்சிக்கு நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். ஒன்றுபட்ட சமூகத்தால் மட்டுமே உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும்" என்று ரேகா குப்தா கூறினார். 

    • இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.
    • இந்தியா ரஷியாவினுடைய சலவை நிலையமாக உள்ளது

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.

    டிரம்பின் எதிர்ப்பை தொடர்ந்தும் இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.

    இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை அதை சுத்திகரித்து ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு விற்பதாக வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவாரோ குற்றம் சாட்டினார்.

    ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய பீட்டர் நவாரோ, இந்தியா ரஷியாவினுடைய சலவை நிலையமாக உள்ளது. இந்திய மக்களின் செலவில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் . அதை நாம் நிறுத்த வேண்டும். இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி, பதப்படுத்தி, அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கின்றன. இது உக்ரேனியர்களைக் கொல்கிறது. வரி செலுத்துவோராக நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் அவர்களுக்கு அதிக பணம் அனுப்ப வேண்டும்.

    பிரதமர்மோடி ஒரு சிறந்த தலைவர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அவர் விளாடிமிர் புடின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் ஏன் கூட்டு சேருகிறார் என்பது எனக்குப் புரியவில்லை" என்று தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி தொடங்கப்படும்.
    • பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளோம்.

    சென்னை:

    தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது. அரசியல் அங்கீகாரத்தை பெறும் போது தான் சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்த கட்சிகள் எல்லாம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி தொடங்கப்படும்.

    பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்படுகிறது. சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்.எல்.ஏ. வாக இல்லை. பிராமணர்களின் புதிய கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அதில் பல்வேறு பிராமண சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளனர்.

    அப்போது தான் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தெரியவரும். அதே நேரத்தில் என்னை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

    பாராளுமன்ற தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் அனைவருமே வசதியாண வாழ்க்கையை வாழவில்லை. பிராமணர்களிலும் தினக்கூலிகள் இருக்கிறார்கள். இது போன்ற பிராமணர்களின் நலனுக்காகவே புதிய கட்சி தொடங்கப்படுகிறது. மேடான பகுதிகளையும், பள்ளத்தையும் சரி செய்து சமமாக்குவதே சமூக நீதியாகும். ஆனால் அது போன்ற சமூகநீதி இங்கு இல்லை.

    ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகாவில் பிராமணர்கள் நலனுக்காக நலவாரியம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அது போன்று எந்த அமைப்பும் தமிழகத்தில் இல்லை.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளோம்.

    அதை வைத்து அடுத்த சட்ட மன்றதேர்தலில் பிராமணர்கள் கட்சி கூட்டணி அமைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது.

    பிராமணர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றும் நேரத்தில் பிரதமர் மோடியிடம் அது பற்றி எடுத்துச் சொல்லி விட்டு அதன் பிறகே பா.ஜனதாவில் இருந்து வெளியேறுவேன்.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மோடியின் புகழை உயர்த்தி பிடித்து, கட்சியை வளர்க்க முற்படாமல் வீண் விளம்பரங்களை தான் செய்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

    • சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான் என பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா கூறியிருந்தார்
    • அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது

    அரியானா மாநிலம் ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா பிராமணர்கள் பற்றிய பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    "சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான், நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை, சாதியக்கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு" என்று அவர் பேசியிருந்தார்.சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான்,

    ரஞ்சித் சவுதாலாவின் இக்கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அரியானா பிராமண சபா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், ரஞ்சித் சிங் சவுதாலா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "சமூகத்தில் முன்னணி சமூகமாக இருக்கும் பிராமண சமூகத்தின் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. என் வார்த்தைகளால் அவர்களது மனது புண்பட்டிருந்தால், நான் அந்த வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன். நான் யாரையும் அவமதிக்க நினைக்கவில்லை" என்று பேசியுள்ளார்.

    • சனாதன தர்மத்தைப் பாதுகாக்க பிராமண தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெறுவது முக்கியம்.
    • நமது வருங்கால தலைமுறையை காக்க வேண்டியது உங்கள் கடமை

    மத்தியப் பிரதேசத்தில் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசின் பிராமண நலவாரியத் தலைவர் விஷ்ணு ரஜவுரியா அறிவித்துள்ளார்.

    இந்தூரில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா, "சனாதன தர்மத்தைப் பாதுகாக்க பிராமண தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெறுவது முக்கியம். அதனால் அவர்களில் ஒருவர் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், குடும்பத்திற்காக சம்பாதிக்க முடியும் மற்றும் 'மோட்ச தர்மத்தை' அடைய முடியும்.

    நாடு நாளுக்கு நாள் முன்னேறி வருவதால், இந்தியாவில் வளங்களுக்குப் பஞ்சமில்லை. நம்மிடம் வலுவான மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசாங்கம் உள்ளது.

    வறுமை மற்றும் பணவீக்கம் தொடர்பான பிரச்சனைகளை நாம் பேசக்கூடாது. சமீபகாலமாக 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். வலிமையான தேசத்தை உருவாக்கி வருகிறோம். எனவே சனாதன தர்மத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். .

    கல்விதான் முக்கியம் என கற்பிக்கப்படுவதால் இளம் தலைமுறையினர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்கின்றனர். நமது வருங்கால தலைமுறையை காக்க வேண்டியது உங்கள் கடமை" என்று தெரிவித்துள்ளார்.

    ×