search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "debt troublesome"

    செய்யாறு அருகே கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்த அண்ணன் சாவு தம்பிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள கீழ்புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் இவரது தம்பி கோபி (வயது 34) இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தனர்.

    இருவருக்கும் மது பழக்கம் இருந்து வந்தது. இதனால் ஊரை சுற்றிலும் கடன் தொல்லை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்த 2 பேரும் சம்பவத்தன்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    இதனை கண்ட உறவினர்கள் 2 பேரையும் மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் நேற்று இறந்தார்.

    கோபி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி அருகே கடன் தொல்லையால் குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பல்லடம்:

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (34). இவரது மனைவி தவமணி (31). இவர்களுக்கு 3 வயதில் மோனிகா என்ற பெண் குழந்தை இருந்தது.

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள பெருந்தொழுவு கவுண்டம்பாளையத்தில் சதிஷ்குமார் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சதிஷ்குமார் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். இதனை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் மிரட்டி உள்ளனர்.

    இதனை மன வேதனை அடைந்த சதிஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இன்று காலை தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்தார்.

    இதில் சதிஷ்குமார் மற்றும் அவரது குழந்தை மோனிகா சம்பவ இடத்திலே மூச்சு திணறி இறந்தனர். தவமணி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இது குறித்து அவினாசி பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் குழந்தையுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெருந்தொழுவு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோட்டைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது36). கூலித்தொழிலாளி. இவருக்கு அளவுக்கு அதிகமாக வட்டிக்கு கடன் வாங்கி இருந்தது தெரியவந்தது. இதனால் கடனை திருப்பி அடைக்க முடியாமல் தவித்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    இதேபோன்று கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன்கோவில் தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன் (45). இவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ராணி என்ற மனைவியும் ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் கார்த்திகேயன் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவங்கள் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர் அருகே கடன் தொல்லையால் கிரானைட் நிறுவன ஊழியர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம்கொத்தபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புட்டன் என்பவர் மகன் சித்ரசேகரன்(34). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு அதிக அளவில் கடன் இருந்துள்ளது. அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் பரிதவித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று காலையில் வீட்டின் அறையில் தூக்கு மாட்டி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் சித்ரசேகரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமலை அருகே கடன் தொல்லையால் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாதி செர்லா கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தம்(39), இவரது மனைவி பத்மாவதி (32). இவர்களுக்கு மகேஷ் குமார் (11) திரிஷா (6) என்ற மகன், மகள் உள்ளனர்.

    புருஷோத்தம் திருப்பதியில் உள்ள பி.டி.ஆர் காலனியில் தங்கியிருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் கூடத்தில் ஒப்பந்த ஊழியராக கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

    அவர் பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் புருஷோத்தம் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்து, கொடுத்த கடனை திருப்பி கேட்டனர்.

    இதனால் மனமுடைந்த புருஷோத்தம் வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணினார். தன்னுடைய மகன், மகளை தூக்கில் தொங்கவிட்டு கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கியுள்ளனர். அப்போது திரிஷா வலியால் கூச்சலிட்டார்.

    திரிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து வீட்டினுள் ஓடிவந்தனர். அப்போது அங்கு 4 பேரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தூக்கில் தொங்கியவர்களை மீட்டனர்.

    ஆனால் புருஷோத்தம், அவரது மனைவி பத்மாவதி, மகன் மனோஜ்குமார் ஆகியோர் இறந்துவிட்டனர். திரிஷா மட்டும் உயிர் தப்பினார். அவரை மீட்டு ரூயா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து, தகவல் அறிந்த திருப்பதி எஸ்.பி. அன்புராஜன், திருப்பதி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து திருப்பதி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சுங்குவார்சத்திரம் அருகே கடன் தொல்லையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த பாப்பான்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (47). இவர் சந்தவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார்.

    ஓட்டலில் வியாபாரம் சரியாக இல்லாததால் பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தார். கடன் தொல்லை தாங்காமல் ராஜேஷ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். #tamilnews
    கடன் தொல்லையாலும், மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாத ஏக்கத்திலும் பாப்ஸ்கோ ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் புதுநகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). பாப்ஸ்கோ ஊழியர்.

    இவருக்கு காமாட்சியம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில் இளைய மகளும் திருமண வயதில் உள்ளார்.

    இந்த நிலையில் 2 மகள்களுக்கு கடன் வாங்கி திருமணம் செய்து வைத்திருந்த நிலையில் சம்பளம் வழங்கப்படாததால் ராமச்சந்திரன் அந்த கடனை அடைக்க முடியாமல் திண்டாடி வந்தார்.

    அதோடு இளைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமே என்ற கவலையில் இருந்து வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு ராமச்சந்திரனை வலியுறுத்தி வந்ததால் விரக்தியில் இருந்து வந்தார்.

    இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குபோட்டு தொங்கினார்.

    அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திரனை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சம்பளம் வழங்கப்படாததாலும், கடன் தொல்லையாலும் வில்லியனூர் வசந்தம் நகரை சேர்ந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியர் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதேபோன்று சம்பளம் வழங்கப்படாததால் கடன் தொல்லையில் பாப்ஸ்கோ ஊழியர் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வில்லியனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி திருவெறும்பூர் அருகே கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெறும்பூர்:

    திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்குமலை பெரியார் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இந்து என்கிற மகள் உள்ளார். சக்திவேலுக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த அவர்,நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. 

    இந்த நிலையில் துவாக்குடி அண்ணா வளைவுப் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாக வேப்பமரத்தில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக துவாக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். 

    அப்போது அங்கு இறந்து கிடந்தது சக்திவேல் என்பது தெரியவந்தது. கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் லாரி அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் குண்டல்பட்டி ரோட்டில் வசித்து வருபவர் சம்பத். இவரது மகன் சபரிகிரி(29). இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. 

    இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    வண்டிக்கு கடன் தொகையை செலுத்தாததால் பைனான்ஸ் ஊழியர்கள் மினிஆட்டோவை பறிமுதல் செய்ததால் மனமுடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேலரஅள்ளி கொட்டபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிவண்ணன் (வயது 29). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஒரு மினி சரக்கு ஆட்டோவை சொந்தமாக வாங்கினார். அந்த ஆட்டோவில் சரக்குலோடுகளை ஏற்றி கொண்டு சென்று அதில் வரும் வருமானத்தை வைத்து கடந்த 9 மாதங்களாக பைனான்ஸ் நிறுவனத்திற்கு பணத்தை சரியாக கட்டி வந்தார்.

    இந்த நிலையில் சரியாக வேலை இல்லாததால் சரக்கு ஆட்டோவை ஓட்டாமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வருமானம் இல்லாமல் வண்டிக்கு கட்ட வேண்டிய கடன் தொகையை கடந்த 2 மாதங்களாக கட்டாமல் இருந்தார். கடந்த 2 மாதங்களாக பைனான்ஸ் ஊழியர்கள் பணத்தை கட்டாதது குறித்து மணிவண்ணனிடம் கேட்டனர். அதற்கு அவர் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. 

    அப்போது அவர்கள் மணிவண்ணனிடம் பணம்  இல்லாமல் எதற்காக வண்டியை வாங்கினீர்கள்? என்று ஆவேசமாக பேசினர். பின்னர் பைனான்ஸ் ஊழியர்கள் மணிவண்ணன் வாங்கிய மினி சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. சரிவர வருமானம் இல்லாமல் அவதியுற்ற மணி வண்ணனுக்கு பைனான்ஸ் ஊழியர்கள் மினிசரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்த சம்பவம் மேலும் மனவருத்தத்தை அதிகரிக்க செய்தது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. 

    பெற்றோர்களும், நண்பர்களும் மணி வண்ணன் பணத்திற்காக யாரிடமாவது கேட்க சென்று இருப்பார் என்று நினைத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கொட்டப்பள்ளம் அருகே உள்ள ஒரு மாந்தோப்பில் மாமரத்தில் மணிவண்ணன் தூக்கில் பிணமாக கிடந்தார். 

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மணிவண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டிக்கு கடன் தொகையை செலுத்தாததால் பைனான்ஸ் ஊழியர்கள் மினிஆட்டோவை பறிமுதல் செய்ததால் மனமுடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் தற்கொலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆர்.எஸ்மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெருமாண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிற்றரசு. இவரது மகன்கள் தமிழ்அரசன் (வயது32), தமிழ்செல்வன் (27). இந்த நிலையில் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக வசந்தா என்பவரை சிற்றரசு திருமணம் செய்தார்.

    தமிழ்செல்வன் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தமிழ்அரசன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்அரசனுக்கு திருமணம் நடைபெற்றது. அண்ணன் திருமணத்திற்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் தமிழ்செல்வன் சிலரிடம்  கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வசந்தா, திருமணத்திற்கு வந்த நகைகளில் தனக்கு தாலி செயின் ஒன்று வாங்கி கொடுக்குமாறு வலியுறுத்தினாராம். இதனால் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தமிழ்செல்வன் நேற்று அங்குள்ள தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இதனால் ஆத்திரமடைந்த தமிழ்அரசன், வசந்தாவிடம் சென்று எனது தம்பி சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது உறவினர் வினோத் என்பவர் தடுத்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் தமிழ்அரசன், வினோத்தை கத்தியால் குத்தினார். காயமடைந்த அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக தமிழ்செல்வன் தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடன் தொல்லையால் பூ வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் குன்னங்கல் பாளையம் பிரிவு சிவன்மலை ஆண்டவர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). பூ வியாபாரி. இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை செல்வராணி அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்த போது சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த செல்வ ராணி அலறி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

    இது குறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூ வியாபாரி சிவக்குமார் சிறுசிறு கடன் வாங்கி இருந்தார். அதனை செலுத்த முடியாமல் தவித்தார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகக போலீசார் கூறினர்.
    ×