search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fisherman suicide"

    • மீனவர் சுரேந்தர் காசிமேடு பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    சென்னை காசிமேடு சிங்கார வேலன் நகரை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். திருமணமானவர். சம்பவத்தன்று மீனவர் சுரேந்தர் காசிமேடு பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை மீன்பிடி துறைமுகத்தில் பழைய ஏலம் விடும் இடத்தில் அவரது உடல் ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுரேந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுரேந்தர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விரக்தியில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கூனிமேடு குப்பத்தை சேர்ந்தவர் பழனி. மீனவர். இவரது மனைவி அஞ்சனா (வயது 48). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் இருந்தனர்.

    மூத்த மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் ராஜசங்கர் (வயது 23). மகள் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனிடையே பழனி அப்பகுதியில் சீட்டு பிடித்து வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியாமல் போனது. ஊர் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. ஊர் பஞ்சாயத்தார் பழனி குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

    இதனையடுத்து அவர்கள் நல்லவாடு உள்ளிட்ட சில மீனவ கிராமங்களுக்கு சென்றபோது அவர்களும் ஊருக்குள் இவர்களை அனுமதிக்கவில்லை.

    இதனையடுத்து அஞ்சனா தனது மகன் ராஜசங்கருடன் முதலியார்பேட்டை கருமார வீதியில் வாடகை வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குடியேறினார். ராஜசங்கருக்கு மீன்பிடி தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாத காரணத்தினால் வீட்டிலேயே இருந்து வந்தார். அஞ்சனா மீன் விற்று குடும்பத்தை நடத்தி வந்தார். தான் வேலைக்கு செல்லாமல் தாய் வேலைக்கு செல்வதால் ராஜசங்கர் மிகவும் மனவேதனையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அஞ்சனா மூத்த மகனுக்கு பெண் பார்க்க பூம்புகார் சென்றிருந்தார். இரவு அங்கு தங்கிவிட்டு, மறுநாள் காலை வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீடு பூட்டாமல் மூடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜசங்கர் தூக்குபோட்டு பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அஞ்சனா கதறி அழுதார்.

    இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குருசுகுப்பத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை குருசுகுப்பம் பிரான்சிஸ் ஆசிப் தெருவை சேர்ந்தவர் தேவராசு (வயது 55). மீனவர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    தனியாக வசித்து வந்த இவர் அதே பகுதியில் வசித்து வந்த அவரது அக்காள் விஜயா அவ்வப்போது சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்து வந்தார்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள தேவராசு திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அவர் வீட்டில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.

    அப்போது எதேச்சையாக வீட்டுக்கு வந்த விஜயா அங்கு தனது தம்பி தேவராசு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தேவராசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாணரப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (27). பெயிண்டர். குடிப்பழக்கம் உள்ள இவர் கஞ்சா பழக்கத்துக்கும் ஆளானார். இதனால் எப்போதும் போதை மயக்கத்திலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சிவசங்கர் வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் சிவசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோட்டைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது36). கூலித்தொழிலாளி. இவருக்கு அளவுக்கு அதிகமாக வட்டிக்கு கடன் வாங்கி இருந்தது தெரியவந்தது. இதனால் கடனை திருப்பி அடைக்க முடியாமல் தவித்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    இதேபோன்று கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன்கோவில் தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன் (45). இவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ராணி என்ற மனைவியும் ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் கார்த்திகேயன் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவங்கள் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளச்சல் அருகே மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    குளச்சல்:

    குளச்சல் அருகே உள்ள சைமன் காலனியைச் சேர்ந்தவர் மிக்கேல் ஸ்டார்பின் (வயது 35). இவர் மீன் பிடித்தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி மேரி மஜோரா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார்.

    மிக்கேல் ஸ்டார்பினுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்தார். அவரது மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு உருவானது.

    இந்தநிலையில் நேற்றும் இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரவு மிக்கேல் ஸ்டார்பின் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் கீழே வராததால் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தொட்டில் கயிறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுபற்றி குளச்சல் போலீசில் மேரிமஜோரா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து மிக்கேல் ஸ்டார்பின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    ஆத்தூர் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயலை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகன் ஒலிபர் (வயது31). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாக வில்லை.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடங்குளம் அருகே பள்ளிக்கூடத்தில் மீனவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூட்டப்புளியை சேர்ந்த மீனவர் கிறிஸ்டோபர் (வயது23). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூட வராண்டாவில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    அவரது சாவில் மர்மம் இருப்பதாக கிறிஸ்டோபரின் தந்தை சந்தியாகு பழவூர் போலீசில் புகார் செய்தார். மேலும் கிறிஸ்டோபர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட் டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து பழவூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ரகு பாலாஜி மற்றும் போலீசார் அவர்களை சமரசம் செய்து கிறிஸ்டோபர் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இதில் கிறிஸ்டோபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கிறிஸ்டோபர் அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த பிரச்சினையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட கிறிஸ்டோபர் நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு கூட்டப்புளி வந்த கிறிஸ்டோபர், பள்ளிக் கூடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

    அவர் தற்கொலைக்கு முன்பாக சிலரது பெயர்களை சுவற்றில் எழுதி வைத்து இருந்தார். இதனால் கிறிஸ்டோபர் தற்கொலைக்கு அவர்கள் காரணமா? என்று போலீசார் 4 பேர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #tamilnews
    தேங்காய்திட்டில் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்திட்டு புதுநகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). மீனவர். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகனுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் நடந்த நிலையில் வளர்மதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார்.

    மனைவி இறந்த சோகத்தில் இருந்து வந்த செல்வம் 2 மகள்களுக்கு எப்படி திருமணம் செய்து கொடுக்க போகிறோம்? என வேதனையில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை செல்வத்தின் உறவினர் விஜயன் அங்குள்ள கோவில் பின்புறம் உள்ள தோப்புக்கு சென்ற போது அங்குள்ள ஒரு மரத்தில் செல்வம் கைலியால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×