search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife scold"

    புதுவை உருளையன்பேட்டையில் மனைவி திட்டியதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை ராஜாநகர் ரைஸ்மில் வீதியை சேர்ந்தவர் செங்கேணி (வயது55), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ருக்மணி வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    கடந்த சில நாட்களாக செங்கேணி வேலைக்கு ஏதும் செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். மேலும் ருக்மணி மற்றும் உறவினர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மதுகுடித்து வந்தார். இதனை ருக்மணி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த செங்கேணி மனைவி வீட்டின் மாடிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ருக்மணி உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செங்கேணியை தூக்கில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    குளச்சல் அருகே மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    குளச்சல்:

    குளச்சல் அருகே உள்ள சைமன் காலனியைச் சேர்ந்தவர் மிக்கேல் ஸ்டார்பின் (வயது 35). இவர் மீன் பிடித்தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி மேரி மஜோரா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார்.

    மிக்கேல் ஸ்டார்பினுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்தார். அவரது மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு உருவானது.

    இந்தநிலையில் நேற்றும் இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரவு மிக்கேல் ஸ்டார்பின் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் கீழே வராததால் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தொட்டில் கயிறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுபற்றி குளச்சல் போலீசில் மேரிமஜோரா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து மிக்கேல் ஸ்டார்பின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    நெட்டப்பாக்கத்தில் வேலைக்கு செல்லாத கணவரை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    மடுகரை இந்திராநகரை சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). இவர் நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி வாசுகியை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்தது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று அவர் சிகிச்சை முடியும் முன்பே வீடு திரும்பினார். அப்போது கணவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை வாசுகி கண்டித்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த மதியழகன் சோகத்துடன் டெய்லர் கடைக்கு சென்றார். இதனால் சந்தேகமடைந்த வாசுகி, கணவர் சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து டெய்லர் கடைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது கடையில் மதியழகன் தனது வேட்டியால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல் நெட்டப்பாக்கம் லட்சுமி நகர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 38). லாரி டிரைவர். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மகேஸ்வரி கூலி வேலை செய்து வந்தார்.

    ராஜாமணிக்கு குடிப்பழக்கம் உண்டு. சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை மனைவி மகேஸ்வரி கண்டித்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த ராஜாமணி அங்கிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அனைத்தனர்.

    பின்னர் அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாமணி இறந்து போனார்.

    மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுகுடிக்க கூடாது என்று மனைவி திட்டியதால் மனமுடைந்த புரோட்டா மாஸ்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் சேலத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், விடுமுறையில் வீட்டுக்கு வந்து இருந்தார். இவருக்கு தினசரி மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால், நேற்று வீட்டில் இருந்தபோது மதுகுடிக்க போவதாக கூறியுள்ளார். 

    உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், மதுகுடிக்க கூடாது என்று அவரது மனைவி லட்சுமி, சத்தம் போட்டுள்ளார். இதில் மனம் உடைந்த முருகன், நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×